Tuesday, March 11, 2008

மாதங்களில் அவள் மார்கழி! - 14

பகுதி 13

தனது செல்ஃபோன் ஒலிக்க படுக்கையிலிருந்து எழுந்து தனது செல்போனை எடுத்தான் சக்தி! நந்தினியின் எண்ணிலிருந்து அழைப்பு!

"சக்தி! நான் நந்தினி பேசுறேன்! எப்படி இருக்கீங்க?"

"ஹாய் நந்தினி! இப்ப பரவாயில்லை! ஆல் ரைட் நவ்! ஆனா வீட்டுல அம்மா அப்பால்லாம் பண்ணுற ஆர்ப்பாட்டத்துல டோட்டலா பெட் ரெஸ்ட்தான்! ரொம்ப போர் நந்தினி"

"அட! எதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க சக்தி! நல்லா ரெஸ்ட் எடுங்க! இன்னொரு விஷயம் சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சது யாருன்னு தெரிஞ்சி போச்சு!"

"அப்படியா! ஒரு நிமிஷம் நந்தினி! நான் மொட்டி மாடிக்கு வந்துடறேன்! இங்கே அம்மா காதுல விழுந்தா பிரச்சினை ஆயிடும்! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னு திரும்பவும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க!"

"ஓகே சக்தி!"

"ம் இப்ப சொல்லு நந்தினி! எதுக்காக அடிச்சாங்கன்னு எதாச்சும் தெரிஞ்சிதா? போலீஸ்ல பிடிச்சிட்டாங்களா! உங்க அண்ணன்தான் ஆர்வமா அவனுங்களை தேடிகிட்டிருந்தார் கைல சிக்கினாங்கன்னா உன் அண்ணனே பின்னிடுவார் போல"

"சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சதே அவர்தான்! அடிச்சவங்களைக் கண்டு பிடிக்கிறேன்னு உங்ககிட்டே பாவனை வேற!"

"நந்தினி என்ன சொல்றே நீ? உங்க அண்ணனா?"

"ஆமா சக்தி! அட்ச்சிட்டு அவங்களாவே போலீஸ்ல போயி சரண்டர் ஆயிட்டாங்க! என் அண்ணன் போயி அவங்களை ஜாமீன்ல எடுத்ததை நானே என் கண்ணால பார்த்தேன்! பிறகு ரொம்ப கோபமா சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டே வந்துட்டேன்! என்னமா நடிக்குறாரு தெரியுமா? அன்னிக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவராலே பதிலே சொல்ல முடியலை"

"கொஞ்சம் அவசரப் பட்டுட்டியே நந்தினி! எனக்கென்னவோ அவரா இருக்காதுன்னுதான் தோணுது! உன் அண்ணன் ஜாமீன்ல எடுக்குறதைப் பார்த்தா சொன்னியே! நீயே போய் பார்த்தியா? இல்லை வேற யாராச்சும் சொல்லி போயி பார்த்தியா?"

"என்ன சொல்றீங்க சக்தி! எனக்கு குழப்பமா இருக்கே! அன்னிக்கு வந்த அனானிமஸ் காலை வெச்சித்தான் நான் அன்னிக்கு எலிஃபெண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன் போயி பார்த்தேன்! ஆனா அவரேதான் ஜாமீன்ல எடுத்திருக்கார், அவங்களுக்கும் அண்ணன் அனுப்பினத்தான் ஸ்டேஷன்லே சொல்லி இருக்காங்க!"

"அங்கதான் நந்தினி ஏதோ ஒரு மர்மம் இருக்கு! அவரே ஆட்களை அனுப்பியிருந்தா அவரே போயி ஜாமீன்ல எடுத்திருக்க மாட்டார். அதுக்கு அவசியமும் இல்லை! ஜாமீன்ல எடுக்க அவர் நேர்ல போயித்தான் ஆகணுமா என்ன? அப்புறம் இன்னொரு விஷயம் நந்தினி அதன்பிறகு அந்த ஸ்டேஷன்லே போயி விசாரிச்சி பார்த்தியா அவங்க மேல எஃப்.ஐ.ஆர் என்னன்னு போட்டிருக்காங்கன்னு ஏதாச்சும் தெரியுமா?"

"இல்லை சக்தி! அவர் ஸ்டேஷன்லேர்ந்து கெளம்பின பிறகு நான் திரும்ப ஹாஸ்பிடல் வந்துட்டேன்! அன்னிக்கும் அடுத்த நாளும் அங்கயே இருந்து நீங்க டிஸ்சார்ஜ் ஆகி ஊருக்குக் கிளம்பினதும்தான் வீட்டுக்குப் போயி துவம்சம் பண்ணிட்டேன்"

"தப்பு பண்ணிட்டே நந்தினி! இன்னும் கொஞ்சம் நிதானமா விசாரிச்சிப் பார்த்திருக்கணும்! உன் அண்ணன் என்னை அடிக்கனும்ங்குறதுக்கு காரணமே கிடையாது! மேலும் உன் அண்ணனைப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும்! காலேஜ்ல பசங்க சொல்லி கேட்டிருக்கேன் கொஞ்சம் அடாவடி அரசியல் பண்ணுறவர்தான்! ஆனா காரணம் இல்லாமே யார் மேலயும் கை வைக்க மாட்டார்"

"...."

"அப்படிப்பட்டவர்கிட்டே நீ ஏன் சண்டை போட்டே நந்தினி? பாவம் நீ கோவிச்சிகிட்டேன்னு துடிச்சி போயிருப்பார், முதல்ல வீட்டுக்குப் போயி உன் அண்ணன்கிட்டே மன்னிப்பு கேளு நந்தினி!"

"சக்தி! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு! எதுக்கும் ஸ்டேஷனுக்கு போயி முதல்ல விசாரிச்சிப் பார்த்துடறேன்!" என் கோபம் உங்களுக்கு இப்ப புரியாது சக்தி"

"அண்ணன் மேல தங்கைக்கு கோபம் எல்லாம் வரக் கூடாது சக்தி! அவர் உன் மேல எவ்வளவு பாசமா இருக்கார்!"

"ஐயோ! விடுங்க சக்தி! என்னை மேலும் மேலும் குழப்பாதீங்க! சரி நான் அப்புறமா பேசுறேன் சக்தி" என்று தனது செல்போனை அணைத்துவிட்டு
குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்!

"ஒரு வேளை சக்தி சொல்றது சரியா இருக்குமோ............?"

பகுதி 15

Saturday, March 1, 2008

மாதங்களில் அவள் மார்கழி-13

பகுதி - 12

கண்விழித்துப் பார்த்த சக்தி இன்னமும் சுகந்தி தன் தலையணை அருகில் அழுதவாறே அமர்ந்திருப்பதைக் கண்டான்!

"என்ன சுகந்தி! இன்னமும் நீ அழுகையை நிறுத்தலையா? எனக்குத்தான் ஒண்ணும் ஆகலையே! இன்னும் ரெண்டு நாளில் எல்லாம் சரியாப் போயிடும்னு டாக்டர்தான் சொல்றாருல்ல!"

"உனக்கென்ன நீ பாட்டுக்கு சொல்லிடுவே! உன் வலி என்னென்னன்னு எனக்குன்னுத்தான தெரியும்?" தேம்பியவாறே வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன!

"அட! இதைப் பார்ரா! இங்க பாருடா! பெரிசா வலியெல்லாம் இல்லை எனக்கு! சின்னச் சின்ன காயங்கள்தான் எல்லாமே! அதனாலதான் அன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணி ஊருக்குப் போகலாம்னு அனுப்பினாங்க! இல்லாட்டி அனுமதிப்பாங்களா என்ன?"

"ஆமாடா! உனக்கு ஒண்ணுமே இல்லைதான்! இங்கே நாங்கதான் என்னமோ ஏதோன்னு பதறிகிட்டு இருக்கோம்! போடா இவனே! பெத்து வளர்த்து படிச்சிட்டு வரட்டும்னு மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சா எவனெவனோ வந்து உன்னை அடிச்சிப் போட்டுட்டுப் போறான்! நாங்க ஒண்ணும் இல்லைன்னு நிம்மதியா இருப்பமா?"

என்றவாறே அறைக்குள் நுழைந்தார் சக்தியின் அம்மா!

சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சுகந்தி!

"பாரும்மா! உன் ஃபிரண்டை! எப்படி அடிச்சிருக்காணுங்கன்னு! இதுக்காகவா நாங்க அவனை அனுப்பி வெச்சோம்! "

சட்டேன அவரது கண்களும் கலங்கியது!

"அம்மா! என்ன இது! இங்கயெல்லாம் கண் கலங்கிகிட்டு! நான் நல்லா ஆகிட்டேன்மா! ஒண்ணும் இல்லை! நீங்கதான் ஓவரா கற்பனை பண்ணிகிட்டீங்க!"

"அம்மா சுகந்திக்கு ஒரு காஃபி போட்டுக் கொடேன்! வந்து ரொம்ப நேரம் ஆகுது!" என்றான் சக்தி!

"இரும்மா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தவளை

"நீங்க உக்காருங்கம்மா உங்களுக்கும் சேர்த்து நான் போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சமயலறை நோக்கிச் சென்றாள் சுகந்தி.

"அம்மா பார்த்தியா! உன் மருமகளை! இப்பவே உனக்கு வேலை வெக்கக் கூடாதுன்னு பார்க்குறா" என்றான் சிரித்துக் கொண்டே!

"ஆமாடா! நல்ல பொண்ணாத்தான் தெரியுறா! கண்ணுக்கு லட்சணமா மஹாலட்சுமியாட்டம் இருக்கா! உனக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போயிடுறா! அன்னிக்கு உனக்கு அடி பட்டுடுச்சுன்னு தகவல் வந்ததும் ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா! ம்ஹூம்! எல்லாம் சரி! ஆனா உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னுதான் பக்கு பக்குன்னு இருக்குதுடா சக்தி"

அதற்குள் சுகந்தி வரும் சத்தம் கேட்டதும் இந்த்ப் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டாள் மங்களம்.

"என்ன! அம்மாவும் புள்ளையும் எதைப் பத்தி கவலைப் படுறீங்க?"

காபி டம்ப்ளரை எடுத்து மங்களத்திடம் நீட்டியவாறே கேட்டாள் சுகந்தி!

"எல்லாம் இவன் கல்யாண விஷயம்தாம்மா! இன்னும் ரெண்டு வருஷத்துல இவன் படிப்பை முடிச்சதும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டா அக்கடான்னு நாங்க இருப்போம் இல்லை!"

டக்கென்று வெருண்ட அவள் சக்தியை நோக்கினாள். அவன் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தான்!

"அம்மா! அவளை ஏன் பயமுறுத்துறே! சுகந்தி அம்மா சும்மா உன்னைச் சீண்டுறாங்க! நான் சுகந்திதான் உன் மருமகன்னு சொல்லிட்டேன்"

கையிலிருந்த காஃபி டம்ப்ளரை மேசை மீது வைத்துவிட்டு சட்டென குனிந்து மங்களத்தின் பாதங்களை தொட்டு வணங்கினாள்!

அதற்கு மேல் மங்களத்திற்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!

"நல்லா இரும்மா! இனிமே இவன் உன் பொறுப்பு!" என்று அவளது தோளைத் தொட்டு எழுப்பி நிறுத்தி அவளது நெற்றியில் முத்தமிட்டாள்!

"சரிம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்! சக்தி வரேன்" என்று கூறிவிட்டு உற்சாகமாகக் கிளம்பினாள் சுகந்தி!

தொடரும்................!