tag:blogger.com,1999:blog-74759170850388232952024-03-05T18:52:16.231-08:00shibispadaippugalநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-13310818763013073042009-06-27T12:45:00.000-07:002010-12-09T08:47:21.252-08:00தேடல்கள்என் பாதை எதுவாகவிருக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை! இருப்பினும் அவள் என்னைப் பின்தொடர முயற்சிக்கக் கூடுமெனெ எண்ணியிருந்தேன்! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!<br /><br />கடந்த காலங்கள் எல்லாவற்றிலும் என் முடிவுப்படியே அனைத்தும் நடந்துகொண்டிருந்தன! இதோ கடந்து சென்ற கடைசி நொடிப் பொழுதுவரை அப்படியேதான்! இந்த நொடியிலிருந்து என்னுள் என்னையும் அறியாமல் அப்படியொரு ஐயம் தோன்ன்றியிருக்கிறது! ஏன் எதனால் என்றெல்லாம் என்னால் அறுதியிட்டுக் கூறிவிடமுடியவில்லை! ஆயினும் என் உள்மனது சொல்லிக் கொண்டிருந்தது! என்னையும் மீறி என் அனுமதியின்றி நடந்துவிடுமோ என்ற உறுத்தல் எனக்குள்ளே இப்பொழுது எழுந்துவிட்டிருந்தது!<br /><br />அதோ அந்த மலர்க்கொத்து அங்காடியில்தான் முதன்முதலில் அவளைச் சந்தித்திருந்தேன்!<br />நான் "ஹவ் மச்?" என்றபொழுது என் முகம் பார்த்துப் புன்னகைத்தாள்! "இருநூற்று ஐம்பது மட்டும்". மூன்று நூறு ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொடுத்தேன்! திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயோடு மீண்டும் ஒரு புன்னகை! அவள் உதடுகள் உதிர்த்த நன்றி ஏனோ என் செவிகளுக்குள் செல்ல வில்லை போலும்!<br />"என்ன?" என்று ஏறிட்டு நோக்கினேன் அவளை! மீண்டும் அவள் உதடுகள் எதையோ உதிர்த்தன! சட்டென அங்கிருந்து நகர்ந்துகொண்டாள்!<br /><br />அங்காடி வாயிலை அடைந்தபொழுது, அவள் என் கைகளில் இருந்தாள்! சிறிதும் கனக்கவில்லை! நான் ஏன் அவளை அள்ளி வந்தேன்? அட! அதற்குமல்லவா நன்றி சொல்கிறாள். நியாயமாக கோவித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்! திரும்பிப் பார்த்தேன்! இப்பொழுது அவள் அங்காடிக்குள்ளேயேதானிருந்தாள்! தன் சிநேகிதியிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்!<br /><br />சில நேரங்கள் எனக்குச் சிரிப்பாய்க் கூட இருந்தது! நானா இப்படி? எப்பொழுதும் அவள் முகத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்! கல்லூரி நாட்களில் கூட எந்த ஒரு பெண்ணும் என்னுள் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை! இப்பொழுது என்ன ஏற்பட்டது எனக்கு?<br /><br />மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை எனக்கு! காரண காரியங்களை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையின் விளைவினூடே மீண்டும் நானங்கு சென்றபோது அவள் வேலையிலிருந்து நின்றுவிட்டிருந்தாள்! எப்படியென்று தேடுவது! பெயர் கூடத் தெரியாதே எனக்கு!<br /><br />பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கொண்டபோது மீண்டும் என் கண் முன் தோன்றினாள். அவளது சிநேகிதியின் சிறுகுறும்பு அவள் மீதான என் ஈர்ப்பை அவளிடம் புலப்படுத்தியிருக்கிறது போலும்! என் வருகையை அவளும் எதிர்நோக்கியே இருந்து வந்திருக்கிறாள்!<br /><br />பூங்கொத்து எதுவும் வாங்காத பின்னும் கூட அவளின் புன்னகை எனக்குக் கிடைத்தது!<br />என்னுள் எத்தனையோ பூங்கொத்துக்கள் மழையாய் விழுந்தன! இப்படியே எங்கள் சந்திப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தவண்ணம் இருந்தன! காரண காரியங்களும் தானாகவே அமைந்தன! சில என்னாலும், சில அவளாளும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையே என்று பிரிதொரு நாளில் நாங்களிருவரும் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்!<br /><br />மழை நின்ற பின்னாலும் சில்லென்ற தூறல்கள் விழுந்தவண்ணம் இருந்த ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் என் காதலைத் தெரியப் படுத்தினேன்! அவளிடமிருந்து எந்தவொரு ஆச்சரியமோ, ஆட்சேபணையோ எழவில்லை! அவளது மௌனம் அவளுடைய இசைவுக்கான வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள எனக்குப் போதுமானதாக இருந்தது!<br /><br />என் மீதான அவளது உரிமை அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவள் என்னைப் பின் தொடர்வது பொன்ற பிரம்மை எனக்குள் தோன்றலாயிற்று! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!<br /><br />நாங்கள் மகிழ்ந்திருந்த கணங்கள் எல்லாம் துணுக்குற்ற சில நேரங்களில் அவளது வினாக்கள் என்னைச் சிதறடிக்க முயன்றிருந்தன! ஆயினும் நான் அவற்றை வெளிக்காட்டிக் கொண்டிராதிருந்தவனாயிருந்தேன்! என் அனுமதியையும் பெறாமலேயே என்னை ஆராயத் தொடங்கியிருக்கிறாள் என்றறிந்தபோது எனக்குள் அதிர்ச்சியும், அயற்சியும் ஏற்பட்டிருந்தன!<br /><br />முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவள் என்னை ஆக்கிரமிக்கவும் தொடங்கியிருந்தாள்! என் சட்டைப் பையிலிருந்த சாக்லேட் காகிதங்களைக் கூட சந்தேகக் கண் கொண்டு என் கண்களை அவள் ஊடுறுவிப் பார்ப்பது எனக்குச் சலிப்பைத் தந்தது!<br /><br />இப்பொழுதெல்லாம் எங்கள் சந்திப்புகள் அறவே நின்று போயிருந்தது! தொலைபேசிச் சிணுங்கள்களும் இருப்பதில்லை! என்னை அவளாகவே புறக்கணித்துக் கொண்டிருந்தாள்!<br />தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சென்றாள்! நியாயமான காரணங்கள் அமைந்த பொழுதும் கூட எங்கள் சந்திப்பு ஏனோ நிகழவேயில்லை! அன்றொரு நாள் அவள் பூங்கொத்து அங்காடியில் வேலையாயிருப்பாள் என்ற நம்பிக்கையில் வேறொரு இடத்தில், வேறொரு அங்காடியில் சுற்றிக் கொண்டிருந்த எங்களை எதிர்பாராத தருணத்தில் அவள் சந்தித்த பின்னர்.<br /><br />இப்பொழுதெல்லாம் நான் வேறொரு மலரங்காடிக்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தேன்!<br />"ஹவ் மச்" என்றேன். "முன்னூற்று முப்பது" என்றாள் அவள்! கூடவே புன்னகையும்!<br /><br /><br /><a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html">[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-17715068622739747402009-03-05T09:21:00.000-08:002010-12-09T08:47:21.281-08:00நாலாம்பிறை - திதி 3<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_LrWqMzTQVoQVAGZjOz8buJDbBy76wyV87ow8L-E6proeUSeP1FLGswbJmUVv9HrSf6UhzaIdxvGUnNfiOuRwNzE1zzvNS6Ox6ABXnXZ_Z7f6rHqEzQsPn9vVFq88mLIAR4OwgtFsig/s1600-h/oolaichuvadi-3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 120px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_LrWqMzTQVoQVAGZjOz8buJDbBy76wyV87ow8L-E6proeUSeP1FLGswbJmUVv9HrSf6UhzaIdxvGUnNfiOuRwNzE1zzvNS6Ox6ABXnXZ_Z7f6rHqEzQsPn9vVFq88mLIAR4OwgtFsig/s320/oolaichuvadi-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309755551703474770" border="0" /></a><br /><a href="http://shibispadaippugal.blogspot.com/2009/03/2.html">பகுதி 2</a><br /><br /><br />தனது லேப்டாப் திரையின்மேல் கண்களை மேயவிட்டுக் கொண்டே பேசினார் ஷர்மா!<br /><br />"என்ன யங்மேன்! இரவு நேரத்துல தனியா போகும்போது ஏதாச்சும் பயந்துட்டியா! ஜஸ்ட் இதெல்லாம் ஒரு பிரம்மை!"<br /><br />"இல்லைங்க மிஸ்டர் ஷர்மா! ஜஸ்ட் குரல் கேட்டுது, தெளிவில்லாத வாய்ஸ் கேட்டதுன்னெல்லாம் இருந்தா பிரம்மைன்னு எடுத்துக்கலாம்! தெளிவா ஒரு செய்யுளையே சொன்னப்போ இதிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கணும்னுதான் நினைக்கத் தோணுது!"<br /><br />"அட! அப்படியா! என்ன செய்யுள்னு உங்களுக்கு நினைவிருக்கா மிஸ்டர் நந்தா?"<br /><br />"ம் நல்லா ஞாபகத்தில் இருக்கே!" என்று தன் காதில் விழுந்த சொற்களை கோர்வையாகக் கூற முடியாமல் திக்கித் திணறி சொல்லி முடித்தான்!<br /><br />சற்று யோசித்த ஷர்மா<br /><br />"ம்ஹூம்! நீங்க இதுவரைக்கும் ஜோதிட ஆராய்ச்சி சம்மந்தமான புத்தகங்கள் ஏதாச்சும் படிச்சிருக்கீங்களா?"<br /><br />"இல்லை! படிச்சதில்லை!"<br /><br />"வெரி இண்ட்ரஸ்டிங்க்! நீங்க சொன்ன செய்யுள் புலிப்பாணியார் எழுதின பாடல்களிலே ஒண்ணு! ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் 3,7,5,11 வது இடங்களில் தனித்து இருந்தால் ஜாதகன் மாய மந்திரங்கள் அல்லது வைத்தியக் கலைகளில் தேர்ச்சி பெறுவான் என்று பொருள்! ஆனா இதை எதுக்கு உங்க காதுல வந்து சொல்லணும்!"<br /><br />"வைத்தியக் கலைன்னு சொன்னது ஓரளவு பொருந்தி வருது! நாம பண்ணுறதே மூலிகைகள் தொடர்பான ஆராய்ச்சிதான்! ஆனா மந்திரங்கள் எல்லாம் எதுக்காக கத்துக்கனும் அதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை! ஆர்வமும் இல்லை"<br /><br />"ஒண்ணும் ஆச்சரியப் பட வேண்டாம் மிஸ்டர் நந்தா! உங்க டேட் ஆஃப் பர்த், டைம், பிளேஸ் ஆஃப் பர்த் சொல்லுங்க! வெரிஃபை பண்ணிடலாம்"<br /><br />ஷர்மா கேட்ட தகவல்களைச் சொன்னதும் தனது லேப்டாப்பில் இணைய இணைப்பை உயிர்ப்பித்து ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தேடி அதில் இந்த விவரங்களை உள்ளீடு செய்தார்<br /><br />"யங் மேன்! எனக்கு புரிஞ்சிடுச்சு! கடக லக்கினம் மகர ராசி! ஏழாமிடத்தில் சந்திரன் தனித்து நிற்கிறான்! ஆனா நீ மாய மந்திரமெல்லாம் கத்துக்குவேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை! அஃப்கோர்ஸ் உன்னைப் போலவே எனக்கும் இவ்விஷயங்களில் நம்பிக்கையோ ஆர்வமோ கிடையாது"<br /><br />அப்போது அவரது காரியதரிசி ஆனந்தி அறைக்குள் நுழைந்தாள்!<br />"ஷர்மா! நாம் திருவண்ணாமலை செல்ல வேண்டும்! கார் தயாராக இருக்கிறது!<br />இப்போது புறப்பட்டால்தான் இரவுக்குள் சென்று சேர முடியும்" என்று நினைவூட்டினாள்!<br /><br />"மிஸ்டர் நந்தா! நாம மீட் பண்ணப் போறவங்க டீடெய்ல்ஸ் எடுத்துக்கிடீங்க அல்லவா?"<br /><br />"ஓ! தனியா எடுத்து வெச்சிருக்கேனே"<br /><br />"ஓகே! தென் லெட்ஸ் மூவ்"<br /><br />மூவரும் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார்கள்!<br /><br />ஹோட்டல் வளாகத்தை விட்டு அந்த கார் வெளியேறியதும் ஹோட்டல் காம்பவுண்ட்டிற்கு எதிரே நின்றிருந்த ராஜேஷ் தனது சட்டைப் பையிலிருந்த செல்ஃபோனை எடுத்தான்!<br /><br />"மகேஷ்! கார் புறப்பட்டுடுச்சு!"<br /><br />செல்ஃபோனை அணைத்துத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு சாலையின் இருபுறமும் கவனித்து சாலையைக் கடந்து எதிர்ப்புறம் நோக்கி நடந்தான்!<br /><br />சாலையின் எதிர்ப்புறத்தை அடையச் சில வினாடிகளில்<br />இடதுபுறமிருந்து அதி வேகமாக சரேலெனெ வந்த அம்பாசிடர் கார் இவன் மீது மோது 6 அடி தொலைவில் இவனை வீசி எறிந்தது! விழுந்த அதே நொடியில் அவனது உயிரும் பிரிந்திருந்தது!<br /><br />சாலையில் அவனது ரத்தம் படரத் தொடங்கியது!<br /><br />கார் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது! தான் ஓட்டாமல் காரின் முன்புறம் டிரைவர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நந்தா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்!<br /><br />ஆழ்ந்த தியானித்திலிருந்த சுவாமி நித்தியானந்தர் சட்டென உடல் சிலிர்த்தார்! பின்னர் மெல்லிய சிந்தனையுடன் கண்திறந்தார்!<br /><br />"சுந்தரேசா! அங்கப்பன் மகள் செல்லாயியின் கந்தர்வ மணம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவளிடம் தெரிவித்துவிடு! மேலும் அங்கப்பனை உடனடியாக என்னை வந்து சந்திக்கும்படிக் கூறி இங்கே அழைத்து வா! அவருக்குச் சில வேலைகள் இருக்கின்றன!"<br /><br /><br />தொடரும்...............!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-17440171626537327662009-03-03T12:08:00.000-08:002010-12-09T08:47:21.298-08:00நாலாம்பிறை - திதி 2<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYSrJg85RSbk-to71rcRnqT1E9YavLCSYq56jgAhpX7Xc-r9q0QGggjdXv4qm4MKyCwg7nnZ-UayDHGHHeMnGzFGKsEIwFSs1sDnK9tWKOunWAnUBOS2xnSHvzN0YuJ3mPZIgK1CCYZww/s1600-h/oolaichuvadi-2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 120px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYSrJg85RSbk-to71rcRnqT1E9YavLCSYq56jgAhpX7Xc-r9q0QGggjdXv4qm4MKyCwg7nnZ-UayDHGHHeMnGzFGKsEIwFSs1sDnK9tWKOunWAnUBOS2xnSHvzN0YuJ3mPZIgK1CCYZww/s320/oolaichuvadi-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309056030251107906" border="0" /></a><br /><a href="http://shibispadaippugal.blogspot.com/2009/02/1.html">முதல் பகுதி </a><br /><br />"சுவாமி"<br /><br />குரல் கேட்டு தியானத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தார் நித்தியானந்தர்! இடுப்பில் சுற்றியிருந்த காவி வஸ்திரமும் விபூதிப் பட்டைகள் அணிந்த திருமேனியுமாய் முகத்தில் நிறைந்திருந்த பேரமைதியும், மேனியை அலங்கரித்த ருத்திராட்ச மாலைகளும் சித்தர் என்னுமளவிற்கு உண்டான தேஜஸ் கொண்ட முகப் பொலிவும் கண்களுக்குள் குடிகொண்டிருந்த சாந்தமும் பார்த்தவுடன் கைகூப்பித் தொழச்செய்பவையான தோற்றம் அவருடையது!<br />எத்தனை வயதைக் கடந்திருப்பார் என்று எளிதில் கணக்கிட்டுவிட முடியாது!<br /><br />தலையில் முடிந்த நரைத்த ஜடாமுடியை வைத்து வேண்டுமானால் எண்பதைக் கடந்திருப்பார் என்று கூற முடியும்!<br /><br />எதிரே பணிவாய் நின்றிருந்த சுந்தரேசனை புன்முறுவலுடன் நோக்கினார்!<br />"என்ன சொல்ல வருகிறாய்" என்று அவரது பார்வை கேட்டது!<br /><br />"சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றான் சுந்தரேசன்!<br />"கேள்"<br />"இப்படி விபரீத சிந்தனைகளுடன் தீய சக்திகள் செயலாற்ற முனைந்திருக்கும்போது அவற்றைத் தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு தீங்குகள் விளையும் அல்லவா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பது எப்படி சுவாமி"<br /><br />"ஹெஹெ!" மந்தகாசப் புன்னகையுடன் சிறிது மௌனம் சாதித்தார்!<br /><br />"சுந்தரேசா! எப்பொழுதெல்லாம் தெய்வ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அற்ப மானிடர்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்த எத்தனிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இறைவன் தன்னால் அனுப்பப்பட்ட மானிடர்கள் மூலமே அவர்களைத் தடுத்து தண்டித்து பிறரைக் காக்கவும் செய்கிறான் என்பதை அறிந்ததில்லையா நீ"<br /><br />"அது உண்மைதான் சுவாமி! ஆனால் நீங்கள் சொல்லிய இத்தகைய தீயவர்கள் சாதாரண மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு மந்திர தந்திர சக்திகளால் தீங்கு விளைவிக்க இருக்கிறார்களே! இவர்களிடம் சாதாரண மானிடரால் எப்படி போரிட முடியும்? இறைவனே அல்லவா அவதரிக்க வேண்டும்"<br /><br />"ம்! இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள் உண்டு! இவர்களை வெல்லுமளவிற்கு மந்திர தந்திர திறமைகளுடன் இனிமேலா இறைவன் படைக்கப் போகிறான்! ஏற்கனவே படைத்து விட்டிருக்கிறான் சுந்தரேசா!<br />அவன் விரைவில் இங்கே வரவேண்டும்! அவனது பணி இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்பது எழுதப் பட்டிருக்கிறது!"<br /><br />"அம்மானுடன் இன்னும் தன்னை உணராத நிலையில் இருக்கிறான்! உணர்ந்தபின் அவனது பணி அவனுக்கு உணர்த்தப் படும்! அவனுக்கு அழைப்பு நேற்றே அனுப்பப்பட்டு விட்டது என்பதை அறியமாட்டாய் நீ"<br /><br />"ஆஹா! அப்படியெனில் நிம்மதியாய் இருக்கிறது சுவாமி!"<br /><br />"சுந்தரேசா! உலக உயிர்களுக்காக உன் மனம் கொள்ளும் கவலை எனக்கு ஒருபுறம் மகிழ்வை அளித்தாலும் உலக நிகழ்வுகள் உன்னை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் இன்னும் நீ பக்குவப் படாமால் இருக்கிறாயே என்று என் உள்ளம் துணுக்குறுகிறது"<br /><br />"என் செய்வது சுவாமி! தீய சக்திகள் அழிவுப் பணிக்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டன என்று நீங்கள் சொன்ன கணத்திலிருந்தே என் மனதில் கவலை குடி கொண்டு விட்டது! தவறெனில் மன்னியுங்கள் சுவாமி"<br /><br />"ம்ஹூம்! இது உன் தவறல்ல சுந்தரேசா! இன்னும் சில காலம் ஆகும்! சஞ்சலங்களில் இருந்து உன்னை நீ விடுவித்துக் கொள்ள! சரி! நேரமாகிவிட்டது!<br />என்னுடன் வா! சில மூலிகைகள் தேட வேண்டிய வேலை இருக்கிறது!"<br />என்று கூறியவாறு எழுந்து குடிலின் வேலியைக் கடந்து அந்த காட்டுப் பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தார் நித்தியானந்தர்! அவரைப் பின் தொடர்ந்து சென்ற சுந்தரேசன் சில அடிகள் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தைக் கடக்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்..<br /><br />மரத்தில் விழுதொன்றில் விநோதமான ஒரு துணிப்பையொன்று கட்டப் பட்டிருந்தது! தினமும் கடந்த போதெல்லாம் பார்த்ததில்லை! புதிதாக இருந்தது!<br /><br />"சுந்தரேசா" நித்தியானந்தரின் குரல் கேட்டு மீண்டும் கவனத்தைப் பாதையில் செலுத்தி வேகமாக அவரைப் பின்தொடர்ந்தான்!<br /><br /><br />இவர்களின் பாதையில் எதிர்புறம் இருந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்கள் மூவர் தங்கள் தலையிலிருந்த விறகுச் சுமைகளைக் கீழே வைத்துவிட்டு<br /><br />"கும்புடுறேன் சாமி" என்று அவர் காலில் விழுந்து வணங்க<br />"ம்ம்! நலமுடன் வாழ்க" என்று ஆசீர்வதித்து அவர்களுக்கு தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து வழங்கினார் நித்தியானந்தர்!<br /><br />"என்னம்மா! காய்ந்த குச்சிகளைத்தானே பொறுக்கிக் கொண்டு போகிறீகள்? மரம் செடிகளில் கை வைப்பது இல்லையே" என்று சிரித்தவாறே கேட்டார்.<br /><br />"ஐயயோ! அப்படியெல்லாம் செய்வமா சாமி! காஞ்ச குச்சிகளைத்தான் எடுக்குறோம்! நீங்க சொன்னமாதிரித்தான் நடந்தாத்தானே எங்க பொழப்பு பிரச்சினையில்லாம போகும்"<br />கொஞ்சம் வாயாடிப் பேசும் பெண்ணொருத்தி முன்வந்து பேசினாள்! மீதமிருவரும் மௌனமாக நின்றார்கள்!<br /><br />"ம்ஹூம்! நல்லது! அங்கப்பன் மகள் செல்லாயி மௌனத்தில் ஏதோ மர்மர் இருப்பது போல் இருக்கிறதே" என்று நித்யானந்தர் மர்மப் புன்னகையுடன் கேட்க<br />விக்கித்து நிமிர்ந்தாள் செல்லாயி!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-11711501100117456552009-03-03T09:24:00.000-08:002010-12-09T08:47:21.320-08:00கல்லூரி நாட்கள்முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது முதலில் கண்ணில் தென்பட்டவள் அவள்தான் அன்பரசி! அழகான ராட்சசி, தேவதை, நடமாடும் தென்றல் என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஃபிகர் எல்லாம் இல்லை! கல்லூரி மாணவர்களுக்கே உரிய பாஷையில் சொல்ல வேண்டுமெனில் அட்டு ஃபிகர்! அதைச் சொன்னதற்குக் கூட புதுசாய்ச் சேர்ந்த கூட்டாளி தினேஷ் என்னைக் கிண்டலடித்தான்! அப்பக் கூட இதை ஃபிகர் என்று சொன்ன முதல் ஆள் நான் தான் என்று!<br /><br />லைப்ரரி எங்கே இருக்கு என்று கேட்டபோது அளவான புன்னகையுடன் கைகாட்டினாள். "அதோ அந்தப் பக்கம்"<br /><br />பின்னர் நாட்கள் சென்றுகொண்டிருந்தன! அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தால் சிறு புன்னகை! அவ்வளவே! யாருடனும் எளிதில் சிரித்துப் பேச மாட்டாள்! நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்! "டேய் அவளா பேசணும்னு எதிர்பார்க்கிறே! அவ ஒரு விடியா மூஞ்சிடா"<br /><br />அவளுக்கும் ஒருவன் காதல் கடிதம் நீட்ட அதை வாங்கிய அவள் மிகவும் பொறுப்பாக மெனக்கெட்டு எழுதி முடித்த அசைண்மெண்டைப் போல் விடுதி வார்டனிடம் சமார்த்தாகக் கொண்டு போய் சமர்ப்பித்தாள்! அவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ எங்களின் கிண்டல்களால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்!<br /><br />"மச்சி! நீ வார்டனுக்கு லவ் லெட்டர் எழுதியிருந்தேன்னா கூட பெருமைப் பட்டிருப்பேண்டா! கரெக்டான ஆள் மூலமா கொடுத்தனுப்பிட்டியேன்னு உன் புத்திசாலித்தனத்தை வரலாற்று புத்தகத்துல எழுதி வெச்சிருபோம்! போயும் போயும் இவளுக்கு லெட்டர் எழுதி எங்க மானத்தையும் வாங்கிட்டியேடா"<br /><br />இப்படியே ஆளுக்கு ஆள் அவளை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறிக் கொண்டே வந்ததுபோலிருந்தது எனக்கு!<br /><br />எங்களுடன் நன்றாகப் பழகிய சில மாணவிகள் கூட அவளிடம் கொஞ்சம் டிஸ்டண்ட் வெச்சிக்கோ என்றே கூறியிருந்தார்கள்! ஆனாலும் ராஜி மட்டும் கொஞ்சம் குளோசாக அவளுடன் பழகிக் கொண்டிருந்தாள்! அருகருகேதான் அமர்வார்கள்!<br /><br />"ஹே ராஜி! எங்க இன்னிக்கு உன் ஃபிரண்டு காணோம்?"<br /><br />"ஏன் உதை வேணுமா உனக்கு? அவளைப் பார்க்காம இருக்க முடியலையா? எல்லாம் திமிரு"<br /><br />கம்ப்யூட்டர் லேபில் டாஸ் மெசேஜ் மூலமாக ஒரு நாள் செய்தி அனுப்பினேன்!<br />"ஹாய்! ஹவ் ஆர் யூ?"<br />கம்ப்யூட்டரில் ஐபி மட்டுமே தெரியும் என்பதால் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்! பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டாள்!<br /><br />நான் ராஜியை அழைத்தேன்!<br />"ராஜி! ஹாய் ஹவ் ஆர் யூன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன் கோவிச்சிக்க மாட்டேளே!"<br /><br />"நீ எவ்ளோ தடவை சொன்னாலும் அடங்க மாட்டே! அவளோட அப்பாவை கூட்டிட்டு வரப் போறா! உதை வாங்கித்தான் அமைதியாவே நீயி!" சன்னமான குரலில் எச்சரித்தாள் ராஜி!<br /><br />"ஐயயோ! அப்போ அவகிட்டே நான்தான் அனுப்பினேன்னு சொல்லிடு! அப்படியே ஸாரி சொன்னேன்னும் சொல்லிடு"<br /><br />தலையாலடித்துக் கொண்டு எழுந்து அவளருகே சென்றாள்.<br /><br />சிறிது நேரத்தில் எனக்கும் மெசேஜ் வந்தது!<br /><br />"ஃபைன், நோ நீட் ஆஃப் ஸாரீஸ்"<br /><br />"அட" என்று வியந்து கொண்டேன்! எழுந்து நின்று பார்த்தேன்! புன்னகைத்தாள்!<br /><br />இப்பொழுதெல்லாம் ராஜியுடன் இருக்கும் நேரங்களில் என்னுடனும் அவ்வப்போது சிரித்துப் பேசுகிறாள்! அவ்வப்போது என் மனசுக்குள் வந்து சென்றது! ஆரம்பத்தில் நான் செய்த வர்ணனை " அட்டு ஃபிகரு"<br /><br /><br />எலக்ட்ரானிக்ஸ் லேபில் என் பேட்சில் இரண்டு பெண்கள் இருந்ததாலும், அன்பரசியின் பேட்சில் அவள் மட்டுமே பெண் என்பதாலும் லெக்சரரிடம் கேட்டு எனது பேட்சிற்கே மாறிக்கொண்டாள்!<br /><br />அன்று எங்கள் லதா மேடம் ஒரு சர்க்யூட் பற்றி எங்கள் பேட்சிற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க<br /><br />நாங்களிருவரும் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தோம்!<br /><br />"தண்ணி அடிச்சா மயக்கமா வருமா? எப்படி இருக்கும்" இது அவள்<br /><br />"ஆமா! அதாவது அப்படியே பூமியிலேயே பறக்குற மாதிரி இருக்கும்! நம்ம வெயிட்டே நமக்குத் தெரியாது! ஒரு மாதிரி கிறக்கமா இருக்கும்!"<br /><br />"எதுக்காக அதுலே கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்குறாங்க! அப்படியே குடிச்சா என்ன ஆகும்?"<br /><br />"அப்படியேவும் சில பேரும் குடிப்பாங்க! ஆனா ஆல்கஹால் ஸ்ட்ராங்கா இருக்கும்! வயிறு எரியும்! கெமிஸ்ட்ரி லேப்லே ஆசிட்லே தண்ணி கலந்தா எஃபெக்ட் குறையுமல்ல அது மாதிரி"<br /><br />அவள் விழிகள் வியப்பில் விரிந்தன! எனக்கு அப்போதும் கூட ஏனோ அவள் அழகாகத் தெரிந்தாள்!<br /><br />அதற்குள் எங்கள் மேடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட<br /><br />"இதுக்குத்தான் அந்த பேட்சிலேர்ந்து இந்த பேட்சுக்கு மாறி வந்தியா?...." என்று திட்ட ஆரம்பிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்!<br /><br />"ஹேய் ஹே! எதுக்கு இப்ப அழறே நீ! என்னைக் கூடத்தான் திட்டினாங்க! என்னைப் பாரு! நான் அழுதனா?"<br /><br />ராஜி முறைத்துக் கொண்டிருந்தாள்!<br /><br />"இங்க பாருப்பா! பேசினோம்னு மட்டும் தெரிஞ்சிதான் திட்டினாங்க! இன்னும் என்ன பேசினோம்னு தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப்பாரு"<br />என்று சமாதானப் படுத்தினேன்!<br /><br />"இனிமெ மேடம் திட்டினதுக்கெல்லாம் அழக் கூடாது! அமைதியா தலையை குனிஞ்சி நின்னுகிட்டிருந்தா போதும்! வாய் வலிக்க ஆரம்பிச்சதும் அவங்களா நிறுத்திடுவாங்க! என்ன" என்றபோது க்ளுக் என்று சிரித்தாள்!<br /><br />அன்று மதிய உணவு வேளையில்<br />"நான் கொண்டு வர சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டீங்களா" என்றாள்.<br /><br />"ஏன் சாப்பிடாம! கொடுத்தா சாப்பிடுவோம்!" என்றேன்!<br /><br />"சரி கையை நீட்டுங்க"<br /><br />ஒரு கை சாதம் எடுத்து என் கையில் வைதுக் கொண்டே கேட்டாள்! ராஜி உங்களை அண்ணான்னு சொல்லுறா? நானும் உங்களை அண்ணான்னு சொல்லாமா?<br /><br />"ஹக்!" சோறு தொண்டையிலேயே சிக்கி நின்று கொண்டது!<br />ராஜி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்!<br /><br />"அம்மா தாயே! ஒரு தங்கச்சியை வெச்சிகிட்டே நான் படுற பாட்டை சொல்லி மாளாது! நீ வேற வேணாம் தாயே!" சிரித்துக் கொண்டே சொல்லி மழுப்பினேன்!<br /><br />ராஜி என்னை பாவமாகப் பார்த்தாள்! நான் சட்டென அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்!<br /><br /><a href="http://tamil.blogkut.com/contest0309.html">சங்கமம் - போட்டிக்காக : தலைப்பு "கல்லூரி"</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-12845112481352523822009-02-27T09:30:00.000-08:002010-12-09T08:47:21.339-08:00நாலாம்பிறை - திதி 1<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu1b0rgznLrFZ-_tJSKm3fYt81WSC-AswVuvzS6z_QFdqWQR3Sblt4vAMtiwfblsm8m-PJ6lIEd2VaiYYMsqgbSsSCZIEFaLEsHLSL5RC1SkDWq4W4G3N_n1GUMfKCUtBKaIluxK5Y97M/s1600-h/oolaichuvadi-1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 120px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu1b0rgznLrFZ-_tJSKm3fYt81WSC-AswVuvzS6z_QFdqWQR3Sblt4vAMtiwfblsm8m-PJ6lIEd2VaiYYMsqgbSsSCZIEFaLEsHLSL5RC1SkDWq4W4G3N_n1GUMfKCUtBKaIluxK5Y97M/s320/oolaichuvadi-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307557614518289842" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: right;"><div style="text-align: left;">நந்தா என்கிற நந்தகோபால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள் மணி இரவு 11 ஆகிவிட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு விரைந்து உள்ளே சென்றான். சரியாக 11.20 க்கு விமானம் வந்திறங்கிவிடும். நியூயார்க்கிலிருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை முத்தமிட்டபோது நந்தா வரவேற்புப் பகுதியை அடைந்திருந்தான்.<br /><br />வெகுநேரம் காக்க வைக்காமல் உற்சாகமான புன்னகையுடன் வெளிவாசலை நோக்கி நடந்தார் புரஃபசர் ஷர்மா! ஐம்பதைத் தொடும் வயதை அறிவிக்கும் வண்ணம் அவரது முன்னந்தலையில் காணாமல் போயிருந்த கேசமும், பின்னந்தலையின் நரையும் பளிச்சென வெளிப்பட்டிருந்தன. இருப்பினும் வயதை ஒவ்வாத சுறுசுறுப்பு அவரது நடையில் தெரிந்தது! அவருடன் உதவியாளினி ஆனந்தியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இருபத்தைந்தைக் தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் இருபத்தெட்டைக் கடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன என்பதே உண்மை!<br /><br />வரவேற்புப் பகுதியை அடைந்தவுடன் தேடுவதற்கு வாய்ப்பளிக்காமல் "மிஸ்டர் ஷர்மா" என்று குரல் கொடுத்தான் நந்தா. பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேற லேப்டாப் மற்றும் இதர பெட்டிகளை டிராலியில் வைத்து உருட்டிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ஆனந்தி!<br /><br />அவர்கள் மூவரையும் நிரப்பிக் கொண்டு நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நோக்கி புறப்பட்டது கார்!<br /><br />சாலையில் கவனத்தை வைத்து ஓட்டிக் கொண்டே வினவினான் நந்தா!<br />"பயணம் எப்படி இருந்தது மிஸ்டர் ஷர்மா? ஒன்றும் சிரமங்கள் ஏற்படவில்லையே?"<br /><br />"வெரி நைஸ் யங்க் மேன்! இனிமையான பயணம்! இன்னும் சொல்லப் போனால் அந்த பெனிசுல்வேனியப் பல்கலைக் கழகத்தில் கழித்த 4 நாட்களுமே மிக அருமையாகக் கழிந்தன! நல்ல பல மனிதர்கள், ஆர்வம் மிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுடனான கலந்துரையாடல், விருந்து என்று ஒரே அமர்க்களமாக இருந்தது!"<br /><br />இரவு நேரக் நெரிசலற்ற சாலையில் முப்பது நிமிடங்களில் ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்தது!<br /><br />"ஓகே மிஸ்ட ஷர்மா! நன்கு ஓய்வெடுங்கள்! மீண்டும் நாளை மதியம் வந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! குட் நைட்!"<br />"மிஸ் ஆனந்தி! நீங்களும் நன்கு ஓய்வெடுங்கள்! குட் நைட்" என்று விடைபெற்றான் நந்தா!<br /><br />கார்பார்க்கிங்கை நெருங்கி நேரம் பார்க்கையில் மணி 2 ஆகிவிட்டிருந்தது!<br />கார் டாஷ் போர்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான்! பார்க்கிங் காவளாளியின் சம்பிரதாய சலாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காரை வெளியே எடுத்தான்.<br /><br />காரின் ஸ்டீரியோவை ஆன் செய்து தனக்கு பிடித்த மெலோடீச் கலெக்ஷனை ஓடவிட்டான்! ரம்யான அந்த மெலோடி பாடல்களுக்கு நடுவே சிறிது நேரமே சந்தித்த ஆனந்தி அவன் நினைவில் வந்து வந்து சென்றாள்.<br /><br />ஸ்டீரியோவின் மெலோடியஸில் குழைந்த சன்னமான எஸ்.பி.பியின் குரலையும் தாண்டி அவன் காதுகளில் கணீரென்ற குரலில்<br /><br />"சூடப்பா சந்திரனார் மூன்றேழ் ஐந்து<br />சுத்த இந்து பதினொன்றில் தனித்திருக்க<br />மாடப்பா மந்திரங்கள் செய்வான் காளை<br />மகத்தான வாதமொடு வைத்தியம் செய்வான்"<br /><br />என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும் வண்ணம் மெதுவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக ஏதோ ஒரு செய்யுளை சொல்லிக் கொடுப்பது போல் அவனது செவிகளில் கேட்டது!<br /><br />தொடரும்..................!<br /></div></div></div>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-26569308259708678012009-02-12T01:54:00.000-08:002010-12-09T08:47:21.358-08:00மாதங்களில் அவள் மார்கழி - 16<div><a href="http://shibispadaippugal.blogspot.com/2008/09/313-15.html">பகுதி - 15</a></div><br /><br />"என்னடா சொல்றே! நீ சொல்றது நிஜமா? அப்போ அந்த பொறம்போக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?"<br /><br /><br />"ஆமாங்க தலைவரே! அந்தப் பையன் அவங்க ஊர்லயே ஒரு பொண்ணை விரும்பிகிட்டிருக்கான்! அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்! இப்போ அவங்க வீட்டிலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க!"<br /><br /><br />"ம்! என் தங்கச்சி விரும்பிட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான் அவன் மேல கை வெக்காம விட்டிருந்தேன்! எப்போ அவன் என் தங்கச்சியை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிதோ, அவனை உயிரோட விட்டு வெக்க என் மனசு இடம் கொடுக்கலை! நம்ம முரளியை வந்து என்னை பார்க்கச் சொல்லு! அப்படியே அந்தப் பையனோட ஃபோட்டோ ஒண்ணு எனக்கு வேணும்!<br /><br />.....................................................................................................................................................................<br /><br />"அண்ணே! நான் காலேஜுக்கு கிளம்புறேன்"<br />அவசர அவசரமாக நந்தினி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்!<br /><br />"அட! என்னம்மா இது! டிஃபன் கூட பண்ணாம! சாப்பிட்டுட்டுப் போம்மா! மஞ்சுளா நந்தினிக்கு டிஃபன் கூட எடுத்து வைக்காம என்ன பண்ணிகிட்டிருக்கே அங்கே?"<br /><br />சமையலைறை நோக்கிக் குரல் கொடுத்தான் தென்னரசு!<br /><br />"அண்ணே! ப்ளீஸ் காலேஜ் கேண்டீன்ல போயி பார்த்துக்கிறேன்! அண்ணி நிதானமா சமைச்சி உங்களுக்கு கொடுப்பாங்களாம்! நீங்க சமர்த்தா சாப்பிடுவீங்களாம்! நான் இப்போ காலேஜ்க்கு கெளம்புவேணாம், சரியா"<br /><br />கொஞ்சலாகக் கேட்டாள்.<br /><br />"சரி! பார்த்துப் போம்மா! நல்ல பொண்ணுடா!" தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டே வழியணுப்பி வைத்தான்.<br /><br /><br />சரியாக இரண்டு வருடங்கள் கழித்து..........................................................<br /><br />தனது செல்ஃபோன் ஒலிக்க காதருகே கொண்டு சென்றான் சக்தி!<br /><br />"என்ன! இப்பவா! ஹாஸ்பிடல் கொண்டு போயாச்சா! இதோ இப்பவே கிளம்பி வரேன்"..<br /><br />திடுமென டென்ஷன் கூடிப்போனது! அவசர அவசரமாக தனது மேலாளரிடம் கூறி விட்டு அலுவலக வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தான்!<br /><br />மருத்துவமனை ரிஷப்ஷனில் அறை எதுவென விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றான் சக்தி!<br /><br />அவனது பெற்றோர்கள் மற்றும் சுகந்தியின் பெற்றோர்களும் சிறிதளவு பதட்டம் குறைந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்! சக்தி உள்ளே வந்ததும் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.<br /><br />"என்னடா! ரொம்ப வலி எடுத்துடுச்சா!"<br />"ம். எங்க நீங்க வராம ஆஃபீஸ்லயே இருந்துடுவீங்களோன்னு கவலையாயிடுச்சு தெரியுமா! "<br /><br />தலையைத் தடவி விட்டான்!<br /><br />"நான் வராம இருப்பனா சுகந்தி! நீ என் உசிராச்சே! இப்போ என் இன்னொரு உயிரையும் சுமக்குறே! இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த உயிரையும் கைல கொடுக்கப் போறே! இந்த நேரத்துல கண்டிப்பா நான் உன் கூட இல்லாம எங்கடா போயிடுவேன்"<br /><br />"என்னங்க! நமக்குப் பிறக்கப் போறது ஆணா பெண்ணா?"<br /><br />"எதுவா இருந்தாலும் நமக்கு ஓகே சுகந்தி!"<br /><br />"எனக்குப் பொண்ணுதான் பிறக்கணும்னு ஆசையா இருக்குங்க சக்தி!"<br /><br />"அப்ப கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்! ஆமா பொண்ணு பிறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிருக்கே!"<br /><br />"நான் என்ன பேர் வைக்கணும்னு சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு!"<br /><br />"இப்ப எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியலைடா! நீயே சொல்லிடேன்!"<br /><br />மெதுவாக சக்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்! அவளது கண்கள் கொஞ்சம்போல கலங்கியது!<br /><br />"நம்ம பொண்ணுக்கு நந்தினின்னு பேர் வைக்கணுங்க சக்தி!"<br /><br />"ஹேய்! என்ன இது இப்பப் போயி கண் கலங்குறே!"<br /><br />மனசுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பாரமானது! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை!<br /><br />அதற்குள் அந்த அறைக்குள் வந்த நர்ஸ் இருவர் "சார்! நீங்க வெளியே போயி இருங்க! டைம் ஆச்சு! இவங்களை ஆபரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டுப் போகணும்" என்றார்கள்!<br /><br />பழைய நினைவுகள் சக்தியின் மனதில் நிழலாடத் துவங்கின!<br /><br />கல்லூரி கேண்டீனில்<br />"சக்தி! எப்படியோ உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க போல! கங்க்ராட்ஸ் சக்தி" என்றாள் நந்தினி!<br /><br />"ஆமா நந்தினி! ஒரு வழியா சுகந்தியை அறிமுகப் படுத்தி வெச்சி பர்மிஷன் வாங்கிட்டேன்! அம்மாவுக்கு சுகந்தியை ரொம்பவே பிடிச்சிப் போச்சு!"<br /><br />காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறி வகுப்பை நோக்கி நடந்தனர்!<br /><br />திடீரென யாரோ ஓடி வருவது போலத் தோன்ற சட்டெனத் திரும்பினாள் நந்தினி!<br /><br />அதற்குள் ஓங்கிய அரிவாள் ஒன்று சக்தியின் பின்புறக் கழுத்தை நோக்கி வெகு வேகமாக நெருங்க.. சட்டென சக்தியின் விலாவைப் பிடித்து நந்தினி தள்ளிவிட்டாள்!<br /><br />"சக்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ............"<br /><br />சக்தி சுதாகரித்து திரும்புவதற்கு எடுத்துக் கொண்ட ஒரே விநாடி்ப் பொழுதில் நடந்து முடிந்திருந்தது!<br /><br />"டேய்!...." ஓடிவருவதற்குள் வேட்டியும் கைலியுமாய் வந்திருந்த கும்பல் ஓரே ஓட்டமாக ஓடி விட்டிருந்தது!<br /><br />"நந்தினி...நந்தினி...." அலறிக் கொண்டிருந்தான் சக்தி!<br /><br />கழுத்தில் வெட்டுப் பட்ட நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தாள்!<br /><br /><br />"குவா...குவா.." என்ற குழந்தையின் அழுகுரல் சக்தியை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது! ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த டாக்டர் சண்முகவடிவு சக்தியை நெருங்கினார்.<br /><br />"கங்க்ராஜுலேஷன்ஸ் சக்தி! சுகந்தி ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணுதான் பிறந்திருக்கா உங்களுக்கு! இன்னும் அரை அவர்லே சுகந்தி கண்னு முழிச்சிடுவாங்க நீங்க போயி பார்க்கலாம்.."<br /><br />மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த சக்தி, சுகந்தி ஆகியோருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியே இருந்தன!<br /><br />"சொன்ன மாதிரியே என் மருமவ பொண்ணைப் பெத்துக் குடுத்துட்டா! சக்தி!<br /><br />என் பேத்திக்கு என்னடா பேரு வைக்கப் போறே!"<br /><br />"நந்தினி" என்றான் சக்தி!<br /><br />அருகிலிருந்த பெருமாள் கோவில் ஒலி பெருக்கியிலிருந்து சன்னமாக நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் கேட்டன.<br /><br /><a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">"பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்<br />வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்<br />நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று<br />பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே"</a><br /><br /> -:முற்றும்:-<br /><br /><a href="http://shibispadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF">அனைத்துப் பகுதிகளின் தொகுப்பு</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-74466977132686838672009-01-07T06:28:00.000-08:002010-12-09T08:47:21.373-08:00நாலாம்பிறை...................!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_8LFAiAxLZ-5hMq1vgIaXK33DxBGEp8dJmRHHIkz6XSqjsZl51lpEefRG43FXf9m0LLdUZcZ1kk905u0MGsbLHRj_RRxUU4pFNfVQ8cp4qzZ708ZIy-AtESUPDbsGhQ38qOAjRYxCqGE/s1600-h/nalam+pirai+2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_8LFAiAxLZ-5hMq1vgIaXK33DxBGEp8dJmRHHIkz6XSqjsZl51lpEefRG43FXf9m0LLdUZcZ1kk905u0MGsbLHRj_RRxUU4pFNfVQ8cp4qzZ708ZIy-AtESUPDbsGhQ38qOAjRYxCqGE/s320/nalam+pirai+2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5288580215293879890" border="0" /></a><br />நிலையானவை அல்ல<br />உறவுகள்<br />அவை<br />வருவதும் போவதுமாய் இருப்பவை!<br />உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.<br />சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே<br />சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .<br /><br />- சுவாமி பித்தானந்தா<br /><br />நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!<br /><br />தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbWghib6vRvRa8Sf94p8f2omoGsuwOUJsmqJ0Mp3EUgn4AQRmj5VUq8-DA_HjSiVFIrtrAih_WzUoEONudoitpaYJny6tkBsqS39P-rTh40Ww-vjAn4lpGfC28hjAWtIaBbO1Sk0ah4vQ/s1600-h/nalampirai.jpg"><br /></a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-57374059557246998832008-09-24T10:57:00.000-07:002010-12-09T08:47:21.442-08:00மாதங்களில் அவள் மார்கழி - 15<a href="http://shibispadaippugal.blogspot.com/2008/03/287-14.html">பகுதி 14</a><br /><br />"அண்ணே! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!"<br />தயங்கி தயங்கி தென்னரசுவின் அருகில் சென்றாள் நந்தினி!<br /><br />கலைந்த கேசமும், வாரக் கணக்கில் சவரம் செய்யப்படாத தாடையுமாய் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த தென்னரசு திரும்பிப் பார்த்தான்.<br /><br />அருகில் தனது தங்கை நந்தினி கலங்கிய கண்களுடன் நிற்பதைப் பார்த்து பதறி எழுந்தான்.<br /><br />"நந்தினி! வந்துட்டியாடா! என்னை விட்டுட்டுப் போயிட்டியோன்னு துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா?"<br /><br />"அண்ணே! உங்களைச் சரியாப் புரிஞ்சிக்காம சண்டை போட்டுட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!" அவள் விழிகளில் தாரை தாரையார் கண்ணீர் வழிந்தோடியது!<br /><br />"அட! என்னம்மா இது! இப்பத்தான் என்னைப் புரிஞ்சிகிட்டியில்ல அதுவே போதுண்டா! மன்னிப்பெல்லாம் எதுக்கு!"<br /><br />உள்ளேயிருந்த தனது மனைவியை அழைத்தான்.<br /><br />"மஞ்சுளா! நந்தினி வந்துட்டா பாரு! முதல்ல அவளுக்கு காஃபியும் அப்புறம் சாப்பிட டிஃபனும் கொடு! சரியா சாப்பிட்டாளோ என்னவோ"<br /><br />சிலநாட்களாக அன்றாட அரசியல் வாழ்க்கையை விட்டு சோகமே கதியென்று இருந்த தென்னரசுவிற்கு பழைய தெம்பும் குதூகலமும் திரும்பிவிட்டிருந்தது!<br /><br />சக்தியை அடிக்க தனது ஆட்களையே ஏவியது என்றும் ஒரே வாரத்தில் அலைந்து திரிந்து கண்டு பிடித்து தனது தங்கையின் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார்.<br /><br />"இதோ இவந்தான்ம்மா எல்லாத்துக்கும் காரணம்! போன உள்ளாட்சித் தேர்தல்ல இவனுக்கு சீட் கொடுக்கலைன்னு வன்மம் வெச்சிருந்து நேரம் பார்த்து விளையாண்டிருக்கான்! ராஸ்கல்"<br /><br />அண்ணன் தங்கைக்கு இடையில் முன்பு இருந்ததை விட இப்போது பாசம் அதிகரித்திருந்தது! சிறிய இடைவெளி இருவருக்குள்ளும் நிறைய புரிதல்களை<br />ஏற்படுத்தி விட்டிருந்தது!<br /><br />நந்தினியும் தனது பின்னணி நிஜங்களை ஓரளவு அறிந்துகொண்டிருந்தாள்! அன்று சக்தி மட்டும் நிஜங்களைச் சொல்லாமல் இருந்திருந்தால் தான் எவ்வளவு நன்றி கெட்டவளாகி விட்டிருக்கக் கூடும் என்று தனக்குத்தானே வெட்கப் பட்டாள்!<br /><br />இந்த வசதியான வாழ்க்கை, சொகுசு பங்களா, கார்.. இப்படி யாவுமே தனக்கு உரிமையானதல்ல எனினும் தன் அண்ணன் தென்னரசு அப்படி ஒரு எண்ணமே வராமல் தன்னை வளர்த்து வந்த விதம் பற்றியும் எண்ணி எண்ணிக் குமைந்துகொண்டிருந்தாள்!<br /><br />தென்னரசுவின் பாதங்களில் விழுந்து கண்ணீரால் கழுவ அவள் துடித்தாளும் இவளுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதென்று தெரிந்தால் தென்னரசு வருத்தமடையக் கூடும் என்றும் சக்தி சொல்லியிருந்த படியாள் தனக்குத் தெரிந்தவாறு காட்டிக் கொள்ளவில்லை!<br /><br />5 வயதில் திருவிழாப் பண்டிகையில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட இவளை தென்னரசுவின் பெற்றோர்தான் எடுத்து வந்து வளர்த்தன்ர். அப்போது தென்னரசுவிற்கு 13 வயது! அழுதபடி நின்றிருந்த நந்தினியை தென்னரசுதான் அவனது தந்தைக்கு சுட்டிக் காட்டினான்.<br /><br />அப்போது முதல் தனது தங்கை தனது தங்கை என்று பாசத்தைக் கொட்டிவந்தான்! அவனது திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே அவனது பெற்றோர்களும் கார் விபத்தில் பலியாகிவிட நாந்தினிக்கு தென்னரசுவே எல்லாமுமாகிப் போனான்.<br /><br />நந்தினிகு ஒரு திருமணத்தை முடித்து வைத்த பின்னரே தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தனது மனைவி மஞ்சுளாவிடமும் கூறி புரியவைத்து சம்மதிக்க வைத்திருந்தான்!<br /><br />"மஞ்சுளா! நந்தினிக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்றே"<br /><br />"பண்ணிடலாம்ங்க! சீக்கிரமே உங்களுக்குத் தெரிஞ்ச வகையில சொல்லி வைங்க! ஏதாவது மினிஸ்டரோட பையனுக்கே கூட பொண்ணு கேட்டு வருவாங்க"<br /><br />"மினிஸ்டரெல்லாம் எதுக்குடி! நந்தினியே ஒரு பையனை மனசுக்குள்ளே முடிவு பண்ணி வெச்சிருக்கா! அப்புறம் பிரைம் மினிஸ்டரே வந்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன்! அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம்னு உனக்குத் தெரியும்ல!"<br /><br />அதற்கு மேல் மஞ்சுளா ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டாள்!<br /><br />-- தொடரும்...நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-37512849341287238602008-03-11T11:58:00.000-07:002010-12-09T08:47:21.490-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 14<a href="http://shibispadaippugal.blogspot.com/2008/03/285-13.html">பகுதி 13</a><br /><br />தனது செல்ஃபோன் ஒலிக்க படுக்கையிலிருந்து எழுந்து தனது செல்போனை எடுத்தான் சக்தி! நந்தினியின் எண்ணிலிருந்து அழைப்பு!<br /><br />"சக்தி! நான் நந்தினி பேசுறேன்! எப்படி இருக்கீங்க?"<br /><br />"ஹாய் நந்தினி! இப்ப பரவாயில்லை! ஆல் ரைட் நவ்! ஆனா வீட்டுல அம்மா அப்பால்லாம் பண்ணுற ஆர்ப்பாட்டத்துல டோட்டலா பெட் ரெஸ்ட்தான்! ரொம்ப போர் நந்தினி"<br /><br />"அட! எதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க சக்தி! நல்லா ரெஸ்ட் எடுங்க! இன்னொரு விஷயம் சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சது யாருன்னு தெரிஞ்சி போச்சு!"<br /><br />"அப்படியா! ஒரு நிமிஷம் நந்தினி! நான் மொட்டி மாடிக்கு வந்துடறேன்! இங்கே அம்மா காதுல விழுந்தா பிரச்சினை ஆயிடும்! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னு திரும்பவும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க!"<br /><br />"ஓகே சக்தி!"<br /><br />"ம் இப்ப சொல்லு நந்தினி! எதுக்காக அடிச்சாங்கன்னு எதாச்சும் தெரிஞ்சிதா? போலீஸ்ல பிடிச்சிட்டாங்களா! உங்க அண்ணன்தான் ஆர்வமா அவனுங்களை தேடிகிட்டிருந்தார் கைல சிக்கினாங்கன்னா உன் அண்ணனே பின்னிடுவார் போல"<br /><br />"சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சதே அவர்தான்! அடிச்சவங்களைக் கண்டு பிடிக்கிறேன்னு உங்ககிட்டே பாவனை வேற!"<br /><br />"நந்தினி என்ன சொல்றே நீ? உங்க அண்ணனா?"<br /><br />"ஆமா சக்தி! அட்ச்சிட்டு அவங்களாவே போலீஸ்ல போயி சரண்டர் ஆயிட்டாங்க! என் அண்ணன் போயி அவங்களை ஜாமீன்ல எடுத்ததை நானே என் கண்ணால பார்த்தேன்! பிறகு ரொம்ப கோபமா சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டே வந்துட்டேன்! என்னமா நடிக்குறாரு தெரியுமா? அன்னிக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவராலே பதிலே சொல்ல முடியலை"<br /><br />"கொஞ்சம் அவசரப் பட்டுட்டியே நந்தினி! எனக்கென்னவோ அவரா இருக்காதுன்னுதான் தோணுது! உன் அண்ணன் ஜாமீன்ல எடுக்குறதைப் பார்த்தா சொன்னியே! நீயே போய் பார்த்தியா? இல்லை வேற யாராச்சும் சொல்லி போயி பார்த்தியா?"<br /><br />"என்ன சொல்றீங்க சக்தி! எனக்கு குழப்பமா இருக்கே! அன்னிக்கு வந்த அனானிமஸ் காலை வெச்சித்தான் நான் அன்னிக்கு எலிஃபெண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன் போயி பார்த்தேன்! ஆனா அவரேதான் ஜாமீன்ல எடுத்திருக்கார், அவங்களுக்கும் அண்ணன் அனுப்பினத்தான் ஸ்டேஷன்லே சொல்லி இருக்காங்க!"<br /><br />"அங்கதான் நந்தினி ஏதோ ஒரு மர்மம் இருக்கு! அவரே ஆட்களை அனுப்பியிருந்தா அவரே போயி ஜாமீன்ல எடுத்திருக்க மாட்டார். அதுக்கு அவசியமும் இல்லை! ஜாமீன்ல எடுக்க அவர் நேர்ல போயித்தான் ஆகணுமா என்ன? அப்புறம் இன்னொரு விஷயம் நந்தினி அதன்பிறகு அந்த ஸ்டேஷன்லே போயி விசாரிச்சி பார்த்தியா அவங்க மேல எஃப்.ஐ.ஆர் என்னன்னு போட்டிருக்காங்கன்னு ஏதாச்சும் தெரியுமா?"<br /><br />"இல்லை சக்தி! அவர் ஸ்டேஷன்லேர்ந்து கெளம்பின பிறகு நான் திரும்ப ஹாஸ்பிடல் வந்துட்டேன்! அன்னிக்கும் அடுத்த நாளும் அங்கயே இருந்து நீங்க டிஸ்சார்ஜ் ஆகி ஊருக்குக் கிளம்பினதும்தான் வீட்டுக்குப் போயி துவம்சம் பண்ணிட்டேன்"<br /><br />"தப்பு பண்ணிட்டே நந்தினி! இன்னும் கொஞ்சம் நிதானமா விசாரிச்சிப் பார்த்திருக்கணும்! உன் அண்ணன் என்னை அடிக்கனும்ங்குறதுக்கு காரணமே கிடையாது! மேலும் உன் அண்ணனைப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும்! காலேஜ்ல பசங்க சொல்லி கேட்டிருக்கேன் கொஞ்சம் அடாவடி அரசியல் பண்ணுறவர்தான்! ஆனா காரணம் இல்லாமே யார் மேலயும் கை வைக்க மாட்டார்"<br /><br />"...."<br /><br />"அப்படிப்பட்டவர்கிட்டே நீ ஏன் சண்டை போட்டே நந்தினி? பாவம் நீ கோவிச்சிகிட்டேன்னு துடிச்சி போயிருப்பார், முதல்ல வீட்டுக்குப் போயி உன் அண்ணன்கிட்டே மன்னிப்பு கேளு நந்தினி!"<br /><br />"சக்தி! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு! எதுக்கும் ஸ்டேஷனுக்கு போயி முதல்ல விசாரிச்சிப் பார்த்துடறேன்!" என் கோபம் உங்களுக்கு இப்ப புரியாது சக்தி"<br /><br />"அண்ணன் மேல தங்கைக்கு கோபம் எல்லாம் வரக் கூடாது சக்தி! அவர் உன் மேல எவ்வளவு பாசமா இருக்கார்!"<br /><br />"ஐயோ! விடுங்க சக்தி! என்னை மேலும் மேலும் குழப்பாதீங்க! சரி நான் அப்புறமா பேசுறேன் சக்தி" என்று தனது செல்போனை அணைத்துவிட்டு<br />குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்!<br /><br />"ஒரு வேளை சக்தி சொல்றது சரியா இருக்குமோ............?"<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2008/09/313-15.html">பகுதி 15</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-57550565988212844372008-03-01T22:22:00.000-08:002010-12-09T08:47:21.506-08:00மாதங்களில் அவள் மார்கழி-13<a href="http://shibispadaippugal.blogspot.com/2008/02/284-12.html">பகுதி - 12</a><br /><p>கண்விழித்துப் பார்த்த சக்தி இன்னமும் சுகந்தி தன் தலையணை அருகில் அழுதவாறே அமர்ந்திருப்பதைக் கண்டான்!</p><p>"என்ன சுகந்தி! இன்னமும் நீ அழுகையை நிறுத்தலையா? எனக்குத்தான் ஒண்ணும் ஆகலையே! இன்னும் ரெண்டு நாளில் எல்லாம் சரியாப் போயிடும்னு டாக்டர்தான் சொல்றாருல்ல!"</p><p>"உனக்கென்ன நீ பாட்டுக்கு சொல்லிடுவே! உன் வலி என்னென்னன்னு எனக்குன்னுத்தான தெரியும்?" தேம்பியவாறே வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன! </p><p>"அட! இதைப் பார்ரா! இங்க பாருடா! பெரிசா வலியெல்லாம் இல்லை எனக்கு! சின்னச் சின்ன காயங்கள்தான் எல்லாமே! அதனாலதான் அன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணி ஊருக்குப் போகலாம்னு அனுப்பினாங்க! இல்லாட்டி அனுமதிப்பாங்களா என்ன?"</p><p>"ஆமாடா! உனக்கு ஒண்ணுமே இல்லைதான்! இங்கே நாங்கதான் என்னமோ ஏதோன்னு பதறிகிட்டு இருக்கோம்! போடா இவனே! பெத்து வளர்த்து படிச்சிட்டு வரட்டும்னு மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சா எவனெவனோ வந்து உன்னை அடிச்சிப் போட்டுட்டுப் போறான்! நாங்க ஒண்ணும் இல்லைன்னு நிம்மதியா இருப்பமா?"</p><p>என்றவாறே அறைக்குள் நுழைந்தார் சக்தியின் அம்மா!</p><p>சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சுகந்தி!</p><p>"பாரும்மா! உன் ஃபிரண்டை! எப்படி அடிச்சிருக்காணுங்கன்னு! இதுக்காகவா நாங்க அவனை அனுப்பி வெச்சோம்! " </p><p>சட்டேன அவரது கண்களும் கலங்கியது!</p><p>"அம்மா! என்ன இது! இங்கயெல்லாம் கண் கலங்கிகிட்டு! நான் நல்லா ஆகிட்டேன்மா! ஒண்ணும் இல்லை! நீங்கதான் ஓவரா கற்பனை பண்ணிகிட்டீங்க!"</p><p>"அம்மா சுகந்திக்கு ஒரு காஃபி போட்டுக் கொடேன்! வந்து ரொம்ப நேரம் ஆகுது!" என்றான் சக்தி!</p><p>"இரும்மா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தவளை</p><p>"நீங்க உக்காருங்கம்மா உங்களுக்கும் சேர்த்து நான் போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சமயலறை நோக்கிச் சென்றாள் சுகந்தி.</p><p>"அம்மா பார்த்தியா! உன் மருமகளை! இப்பவே உனக்கு வேலை வெக்கக் கூடாதுன்னு பார்க்குறா" என்றான் சிரித்துக் கொண்டே!</p><p>"ஆமாடா! நல்ல பொண்ணாத்தான் தெரியுறா! கண்ணுக்கு லட்சணமா மஹாலட்சுமியாட்டம் இருக்கா! உனக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போயிடுறா! அன்னிக்கு உனக்கு அடி பட்டுடுச்சுன்னு தகவல் வந்ததும் ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா! ம்ஹூம்! எல்லாம் சரி! ஆனா உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னுதான் பக்கு பக்குன்னு இருக்குதுடா சக்தி"</p><p>அதற்குள் சுகந்தி வரும் சத்தம் கேட்டதும் இந்த்ப் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டாள் மங்களம்.</p><p>"என்ன! அம்மாவும் புள்ளையும் எதைப் பத்தி கவலைப் படுறீங்க?" </p><p>காபி டம்ப்ளரை எடுத்து மங்களத்திடம் நீட்டியவாறே கேட்டாள் சுகந்தி! </p><p>"எல்லாம் இவன் கல்யாண விஷயம்தாம்மா! இன்னும் ரெண்டு வருஷத்துல இவன் படிப்பை முடிச்சதும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டா அக்கடான்னு நாங்க இருப்போம் இல்லை!"</p><p>டக்கென்று வெருண்ட அவள் சக்தியை நோக்கினாள். அவன் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தான்! </p><p>"அம்மா! அவளை ஏன் பயமுறுத்துறே! சுகந்தி அம்மா சும்மா உன்னைச் சீண்டுறாங்க! நான் சுகந்திதான் உன் மருமகன்னு சொல்லிட்டேன்" </p><p>கையிலிருந்த காஃபி டம்ப்ளரை மேசை மீது வைத்துவிட்டு சட்டென குனிந்து மங்களத்தின் பாதங்களை தொட்டு வணங்கினாள்!</p><p>அதற்கு மேல் மங்களத்திற்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!</p><p>"நல்லா இரும்மா! இனிமே இவன் உன் பொறுப்பு!" என்று அவளது தோளைத் தொட்டு எழுப்பி நிறுத்தி அவளது நெற்றியில் முத்தமிட்டாள்!</p><p>"சரிம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்! சக்தி வரேன்" என்று கூறிவிட்டு உற்சாகமாகக் கிளம்பினாள் சுகந்தி! </p><p>தொடரும்................!</p><p> </p>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-84693980935367189212008-02-28T06:30:00.000-08:002010-12-09T08:47:21.523-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 12<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/11/279-11.html">பகுதி - 11</a><br /><br />"நந்தினி! சொன்னாக் கேளும்மா! சக்தியை அடிக்க நான் ஆள் அனுப்பலை"<br /><br />"நீங்க எதுவும் சொல்லவேணாம்! எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டித்தான் இருந்தேன்! நீங்க அனுப்பலைன்னா நீங்களே போயி ஏன் அவங்களை ஜாமீன்ல வெளியே எடுக்கணும்?-"<br /><br />"ஐயோ! நான் அனுப்பாம அவனுங்களா போயி அடிச்சிட்டு என் பேரைச் சொல்லி போயி சரண்டர் ஆகியிருக்கானுங்க! கட்சில என் பேரு இப்ப கெட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் நான் போயி வெளியெ எடுத்தேன்! அவனுகளை அப்புறமா விசாரிச்சிக்கலாம், இப்போதைக்கு முதல்ல வெளியே எடுத்துடுங்கன்னு சொல்லிதான் இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டாரு"<br /><br />"போதும்ண்ணே! எல்லாம் போதும்! எப்ப என் மனசுக்குப் பிடிச்சவன்னு தெரிஞ்சும் அவனை அடிக்க நினைச்சியோ அப்பவே உன் தங்கச்சி செத்துட்டாண்ணே!"<br /><br />"நந்தினி! அப்படியெல்லாம் பேசாதடா! என்னால தாங்க முடியாது! உனக்கு ஒண்ணுன்னா நான் துடிச்சிப் போவேன்னு தெரியாதாடா உனக்கு!"<br /><br />"ம்ம் தெரிஞ்சி போச்சே இப்பதான் எல்லாம்! சக்தியை நான் விரும்பினா உன் அந்தஸ்து கௌரவத்துக்கு எல்லாம் குறைச்சல் வந்துடும்னு எனக்கே தெரியாம அவனை முடிக்க முடிவு பண்ணிட்டியேன்னா"<br /><br /><br />"நந்தினி! என்னம்மா இது! உங்க அண்ணன் இவ்ளோ தூரம் சொல்றாருன்னா உனக்கு நம்பிக்கை இல்லையா! உங்க அண்ணன் உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்காரு! கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா!"<br /><br />"நீங்க பேசாம இருங்க அண்ணி! எங்க அண்ணன் எப்பேர்ப்பட்டவரு! எப்பெப்ப எப்படியெல்லாம் வேஷம் போடுவாருன்னு இப்ப தெரிஞ்சி போச்சு! தங்கச்சி தங்கச்சின்னு பாசம் காட்டினதெல்லாம் வெறும் வேஷம் அண்ணி! இதயம் ஒண்ணு அவருகிட்டே இருந்தாத்தானே! இன்னும் அவரைப் பத்தி என்ன யோசிக்கணும் அண்ணி?"<br /><br />"நந்தினி! கொஞ்சம் என்ன பேசுறேன்னு யோசிச்சிப் பேசு! உங்க அண்ணனைப் பத்தி உனக்கு இன்னும் முழுசாத் தெரியாது"<br /><br />"மஞ்சுளா! கொஞ்சம் பேசாம இரு! நான் பேசிக்கிறேன்" என்று சமாதானப் படுத்த முயன்றான் தென்னரசு!<br /><br /><br />"தெரிய வேண்டாம் அண்ணி! தெரியவே வேண்டாம்! இது வரை தெரிஞ்சதே போதும்! இந்த மிருக குணம் உள்ளவரை என் அண்ணன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு"<br /><br />"என்னம்மா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! ஓவரா பேசுறியேம்மா! உங்க அண்ணனைப் பத்தி இவ்ளோ பேசுறியே! முதல்ல உன்னைப் பத்தி தெரியுமா உனக்கு?"<br /><br />கோபத்தில் வெடித்தாள் மஞ்சுளா. அடுத்த கணம் பளாரென்று கன்னத்தில் இறங்கியது அறை!<br /><br />"சொல்லிகிட்டே இருக்கேன்! பேசாம போடி உள்ளே"<br />கணீரென்ற குரலில் வந்த தென்னரசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாயைப் பொத்தி அழுதவாறே தந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள் மஞ்சுளா!<br /><br />"பார்த்தீங்களா! பேசிகிட்டிருக்கும்போது பொண்டாட்டியையே இப்படி அடிக்குறீங்களே! மனுஷ ஜென்மமா நீங்க? இனிமே நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்! உங்க சொத்து, அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தோடவுமே நீங்க சந்தோஷமா இருங்க"<br /><br />அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வேகமாக வெளியேறினாள் நந்தினி!<br /><br />............தொடரும்.நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-43547891723865783492007-11-11T10:32:00.000-08:002010-12-09T08:47:21.562-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 11<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/11/278-10.html">பகுதி 10</a><br /><br />அலுவலகக் கோப்பொன்றில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்த தென்னரசுவின் செல்பேசி ஒலித்தது.<br /><br />"ஹலோ"<br /><br />"சார்! நான் எஸ் ஐ தனசேகரன்"<br /><br />"சொல்லுங்க ஆட்களை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?"<br /><br />"ரெண்டு நாளா சிட்டி முழுக்க சர்ச் பண்ணிட்டோம் சார்! ஆனா இன்னிக்கு அவங்களா வந்து சரண்டர் ஆயிட்டாங்க!"<br /><br />"குட்! எஃப்.ஐ.ஆர் போட்டுட்டு யாரு அனுப்புனாங்க என்ன ஏதுன்னு விசாரிங்க!"<br /><br />"சார்.. ஆனா எஃப்.ஐ.ஆர் போடுறதுலே ஒரு சிக்கல்!.."<br /><br />"யோவ். என்னய்யா சிக்கல் அதிலே! காலேஜ்க்குள்ளே புகுந்து ஒரு அப்பாவிப் பையனை அடிச்சிருக்கானுவ! நீங்களே தேடிப் பிடிச்சி ஸ்டேஷனுக்கு அள்ளிகிட்டு வந்திருக்க வேண்டாம்!, ஏன் பெரிய இடத்து ஆளுங்களா, சொல்லுங்க! எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்! முதல்ல எஃப்.ஐ.ஆர் போட்டுடு"<br /><br />"சார்! வேற யாராவதா இருந்தாலும் கூட இந்நேரம் எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிச்சிட்டு உங்ககிட்டு சொல்லி இருப்பேன். இவங்க எல்லாரும் உங்க ஆளுங்க..! நீங்கதான் அடிக்க அனுப்பிச்சதா வேற சொல்றாங்க"<br /><br />"......................"<br /><br />"அதான் சார் என்ன பண்ணுறதுன்னு தெரியாம கொஞ்சம் வெயிட் பண்ணி உங்ககிட்டெ ஒரு வார்த்தை சொல்லிடலாம்ணு"<br /><br />"அப்படியா சரி! அவங்களை ஸ்டேஷன்லலயே வெச்சிருங்க! தோ இன்னும் ஒரு மணி நேரத்துல நானே அங்க வரேன்"<br /><br />மருத்துவமனையில் சக்தியின் கட்டிலருகே நாற்காலியில் அமர்ந்து ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி சக்தியிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி. <br /><br />தாடைப் பகுதிகளில் வலி என்றபோதும் பெரிதான காயம் எதுவும் இல்லாததால் உண்பதற்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை சக்திக்கு!<br /><br />"சக்தி! உங்க அப்பாவுக்கு தகவல் கொடுத்தாச்சு! இந்நேரம் புறப்பட்டு வந்துகிட்டிருப்பாங்க! அநேகமா சாயங்காலத்துக்குள்ளே வந்துடுவாங்க!"<br /><br />"ஐயோ! கேள்விப்பட்டவுடனே துடிச்சிப் போயிருப்பாங்களே நந்தினி! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னே தெரியாம என்னன்னு சொல்லுறது?"<br /><br />சக்தியின் முகத்தில் கவலை ரேகைள் படரத் தொடங்கியதைக் கவனித்த நந்தினி<br /><br />"சக்தி! ரிலாக்ஸ் ஆ இருங்க! அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்"<br /><br />என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அவளது செல்பேசி ஒலித்தது.<br /><br />தனது செல்போனை எடுத்துப் பார்த்தவள்,<br /><br />"இருங்க சக்தி இதோ வந்துடறேன்.." என்று எழுந்து சென்றாள்.<br /><br />"ஹலோ யார் பேசுறது?"<br /><br />"நாங்க யார்ங்குறது இப்போ முக்கியம் இல்லை மேடம்! சக்தியை அடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சாகணும், இப்போ அதுதான் முக்கியம்"<br /><br />"யாரு...யாரு அவங்க? எதுக்காக அடிச்சாங்க...? உங்களுக்குத் தெருயுமா"?<br /><br />படபடவென கேள்விகளை வீசினாள் நந்தினி.<br /><br />"அட! அவசரப் படாதீங்க மேடம்! பொறுமையாக் கேளுங்க! இப்போ டையத்தை வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா யானைக் கவுளி C2 போலீஸ் ஸ்டேஷன் போங்க! உங்களுக்கே எல்லாம் தெரிய வரும், அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க அங்கே போறது பத்தி உங்க அண்ணன்கிடே மூச்சு விட்டுடாதீங்க! சீக்கிரம் கிளம்புங்க! இப்ப கட் பண்ணிடறோம்"<br /><br />தொடர்பு துண்டிக்கப் பட்டது. கால் ரெஜிஸ்டரில் அந்த எண்ணைப் பார்த்தாள்.<br />பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் நம்பராக இருந்தது.<br /><br />"ஏதாச்சும் பூத்லே இருந்து பேசி இருப்பாங்க!" என்று நினனத்துக் கொண்டே புறப்பட ஆயத்தமானாள்.<br /><br />யானைக் கவுளி எனப்படும் எலிபெண்ட் கேட் பகுதியின் சமீபத்தை நெருங்கியதும் மீண்டும் தொலை பேசி அழைத்தது.<br /><br />"ஹலோ! ஸ்டேஷன் பக்கம் போயிட்டீங்களா! உடனே உள்ளே போகாதீங்க! ஒரு பத்து நிமிஷம் வெளியே கொஞ்சம் மறைவா வெயிட் பண்ணி ஸ்டேஷன் வாசலை கவனிங்க!"<br /><br />இதனை மட்டும் சொல்லிவிட்டு தொடர்பு துண்டிக்கப் பட்டது. இந்த முறை வெறொரு தொலைபேசி எண் இருந்தது.<br /><br />அதன் படியே காவல் நிலையத்திற்கு வெகு அருகே செல்லாமல் சற்று முன்பாகவே எதிர்ப்புறம் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் வாசலுக்கு உட்புறமாக நின்று காவல் நிலையத்தை கவனிக்கத் தொடங்கினாள்.<br /><br />ஒரு பத்து நிமிடம் போலக் கடந்ததும் ஸ்டேஷன் உட்புறமிருந்து ஒரு வெள்ளைச் வேட்டி சட்டை யணிந்த வாட்ட சாட்டமான நபர் வருவது தெரிந்தது. பின்னாலேயே நான்கைகந்து பேர்! அட! சாட்சாத் சக்தியை அடித்த அதே அடியாட்கள்!<br /><br />கேட் அருகில் நின்ற அந்த வாட்ட சாட்டமான நபர் அவர்களிடம் ஏதோ பேசி அனுப்ப அவர்கள் விருவிறுவென்று சாலைக்கு வந்து வழியில் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிச் சென்றனர்.<br /><br />ஐந்து நிமிடத்தில் காவல் நிலைய கேட் அருகே ஒரு டாட்டா சஃபாரி வந்து நிற்க அந்த வண்டியில் ஏறுவது தன் அண்ணன் எம்.எல்.ஏ தென்னரசுவேதான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தாள் நந்தினி.<br /><br />அவளது உதடுகள் துடித்தன. கை விரல் நகங்களை வேக வேகமாக கடித்துக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல்!<br /><br />தொடரும்.....................!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-62861309024577467672007-11-11T09:46:00.000-08:002010-12-09T08:47:21.583-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 10<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/10/265-9.html">பகுதி - 9 </a><br /><br />ஒன்றரை நாட்கள் கழித்து மெல்லக் கண் திறந்தான் சக்தி!<br />தான் இருப்பது ஒரு மருத்துவமனையின் சூழல் என்று மங்கலாகத் தெரிந்தது. தலை மற்றும் வலது கையில் வலியை உணர்ந்தான்.<br /><br />கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்தது. லஞ்ச் பிரேக்கில் நந்தினியுடன் கேண்டீன் நோக்கிச் சென்றதும் அப்போது எதிரே நன்கைந்து பேர் ஓடி வந்ததும், தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் தபதபவென தன் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களும்.<br />சட்டென அப்போது தன்னுடன் நந்தினியும் இருந்தது நினைவில் வந்தது.<br /><br />"கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது" மனம் பதைத்தது.<br /><br />மெல்ல வலது கையை உயர்த்த முயற்சித்தான். முடிய வில்லை. வலி உயிர் போய்விடும்போல் இருந்தது. யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று பார்த்தான். அறை வாசலை ஒரு நர்ஸ் கடந்து போவது தெரிந்தது. குரலை உயர்த்தி அழைக்க முயன்றான். சப்தம் அதிகம் எழவில்லை.<br /><br />"சிஸ்டர்" முணகலாக குரல் வெளிப்பட்டது. உதடுகளிலும் காயமடைந்திருப்பதாகத் தோன்றியது. உதடுகளும் கொஞ்சம் தடித்துப் போயிருந்தன. அப்படியே மீண்டும் மயங்கிப் போனான்.<br /><br />கட்டிலருகே யாரோ வந்தது போல் தோன்ற மீண்டும் கண் விழித்தான்.<br />நந்தினி கட்டில் அருகே நின்றிருந்தாள்.<br /><br />"நல்ல வேளை அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை போலும்.." உள்ளூர நிம்மதி அடைந்தான்.<br /><br />"ந..ந..ந்தினி"<br /><br />சட்டென கவனம் கலைந்த நந்தினியின் முகத்தில் புன்னகை பிறந்தது.<br /><br />"சக்தி.. ஆர் யூ ஆல் ரைட்?"<br /><br />அவளுக்குக் குரல் தழுதழுத்தது. சட்டென கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. இரு கரங்களாலும் முகம் பொத்தி அழத் தொடங்கினாள்.<br /><br />இவனால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை.<br />"எதற்காக அழுகிறாள் என்றே தெரியவில்லை. அழுகையை எப்படி நிறுத்துவது? என்றும் புரியவில்லை".<br /><br />அப்படியே கண்களை மூடிக் கொண்டான். இப்போது அவன் கண்களில் இருந்தும் ஒரு சொட்டு கன்னத்தில் வழிந்தது.<br /><br /><br />சிறிது நேரத்தில் அவளது அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகைத்தாள்.<br /><br />"சாரி சக்தி! " என்று அவனது இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/11/279-11.html">தொடரும்.....................!</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-30797949974363485352007-10-22T10:53:00.000-07:002010-12-09T08:47:21.616-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 9<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/10/264-8.html">பகுதி 8</a><br /><br />"டேய் அங்க பாருங்கடா! பூவும் புயலும் ஒண்ணா வருது!" என்ற சக கல்லூரி மாணவர்களின் அங்கலாய்ப்பைப் பொருட்படுத்தாது வண்டியை கல்லூரிக்குள் ஓட்டிச் சென்றான் சக்தி!<br /><br />"ரொம்ப தாங்க்ஸ் சக்தி" என்றாள் புன்னகையுடன்.<br /><br />"தாங்க்ஸை ஒரு காஃபி சாப்பிடுகிட்டே சொல்லலாமே" என்று காண்டீனிற்கு அழைத்துச் சென்றான்.<br /><br />புரொபெசர் சாம் உள்ளே நுழையவும் சலசலப்புகள் குறைந்து வகுப்பு அமைதியானது.<br /><br />"டியர் ஸ்டூடண்ட்ஸ் போன செமஸ்டருக்கான எக்ஸாம் ரிசல்ட் வந்தாச்சு!<br />வழக்கம்போல யுனிவர்சிட்டி ரேங்கிங் நமக்குத்தான் கிடைச்சிருக்கு. அது யாருன்னு உங்களுக்கே தெரியும்"<br /><br />மணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பிறகு அவரையே ஆர்வமுடன் பார்த்தனர்.<br /><br />"யெஸ்! நீங்க எல்லாரும் நினைச்சது சரிதான். மிஸ்டர் சக்தி! ப்ளீஸ் கெட் அப்! அண்ட் கம் ஹியர்" என்று அவர் உற்சாகமாகக் குற கரவோலியில் வகுப்பு அதிர்ந்தது.<br /><br />சக மாணவர்களோ "சக்தி சக்தி.." என்று உற்சாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களே சக்தியை எழுப்பி வகுப்பின் முன்புறமாகத் தள்ளிச் சென்ற்னர்.<br /><br />சக்திக்கு ஒரு புறம் உற்சாகமும், மகிழ்ச்சியும் பெருகி வந்தாலும் ஒரு புறம் கூச்சமாக இருந்தது.<br />"என்னடா இது, அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமாக இருக்கிறதே" என்று நினைத்தவன் "பின்னே சும்மாவா கோல்டு மெடல் அல்லவா, யுனிவர்சிட்டி ரேங்கிங்" என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.<br /><br />நந்தினிக்கு இதயத் துடிப்பு அதிகமானது. அவளது உதடுகள் தன்னிச்சையாய் நகம் கடிக்கத் தொடங்கியிருந்தன.<br /><br />மதிய உணவு இடைவேளை. தனது இருக்கையிலிருந்து சக்தி எழும் முன்னர் நந்தினி அவனை அணுகினாள்.<br /><br />"கங்கிராட்ஸ் சக்தி! நான் எதிர்பார்க்கவே இல்லை! ஆனா சாதிச்சிட்டீங்க"<br /><br />புன்னகையுடன் கை குலுக்கினாள்.<br /><br />"தாங்க்ஸ் நந்தினி. நானும்தான் எதிர்பார்க்கலை. அன்னிக்கு பின்னாடி இருந்து பசங்க பண்ணின சேட்டைல கை தூக்கினேன். சார் பாட்டுக்கு அவரா முடிவு பண்ணிடார். அதுக்கப்புறம் தினமும் எனக்கு தனியா டியூஷன் எல்லாம் எடுத்து...., நான் பட்ட கஷ்டங்களை விடவும், அவரோட உழைப்பையும் மறக்க முடியாது. ஹீ ஈஸ் எ கிரேட் மேன், ரொம்பவே கேர் எடுத்துகிட்டாரு"<br /><br />கல்லூரி காம்பவுண்ட் வாசலில் ஒரு ஜீப் மற்றும் இரண்டு மூன்று பைக்குகளில் சிலர் வந்து இறங்கி இருந்தனர்.<br /><br />கண்ணில் படும் ஒவ்வொருவராக அழைத்து "இங்க யாருடா சக்தி, அவன் கிளாஸ் எங்கடா?" என்றவாறு அராஜமாக அலைந்து கொண்டிருந்தனர்.<br /><br />வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு விறுவிறு வென்று கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்தனர். சக்தியின் வகுப்பறையைக் கண்டுபிடித்து அங்கே செல்ல அங்கே வகுப்பு காலியாக இருந்தது.<br /><br />"டேய் காண்டீன் போயிருப்பான், வாங்கடா போலாம்" என்று காண்டீனைத் தேடிப் புறப்படனர்.<br /><br />சாப்பாட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு பிசைந்து கொண்டே இருந்தாள் சுகந்தி. அவளது கவனம் சாப்பாட்டின் இல்லை என்பது நன்கு தெரிந்தது.<br /><br />காலையில் எழுந்ததில் இருந்தே மனம் ஏதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தது. ஒரு வாய் சாப்பிட்டதும் அவளுக்குப் புரையேறியது.<br /><br />மூக்கின் வழியாக சோற்றுப் பருக்கைகள் வெளியே வந்து விழுந்தன. கண்ணில் நீர் வழிந்தது.<br /><br />"ஏண்டீ! பக்கத்துலதான தண்ணி இருக்கு! எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே"<br />சமையற்கட்டிலிருந்து அம்மாவின் குரல் கேட்டதும் கிளாஸை எடுத்து மடக் மடக் என்று தண்ணீரைப் பருகினாள்.<br /><br />"சக்தி! உனக்கு ஏதோ ஆபத்துடா! கடவுளே! சக்திக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாது"<br /><br />மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் சுகந்தி!<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/11/278-10.html">தொடரும்.....................!</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-50997059488860934082007-10-21T10:12:00.000-07:002010-12-09T08:47:21.632-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 8<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/09/256-7.html">பகுதி 7</a><br /><br /><br />சலவை செய்யப்பட்ட வெள்ளை வேட்டி சட்டையுடன் சோஃபாவில் வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்தார் எம்.எல்.ஏ தென்னரசு. 40 வயதைக் கடந்திருந்தாலும் இளமையான தோற்றத்திலும் சுறுசுறுப்பிலும் 35 ஐத் தாண்டியிருக்க மாட்டார் என்றே நம்பத் தோன்றும். பின்புறம் பவ்யமாய் பி.ஏ கையில் கோப்புகளுடன் நின்றிருக்க எதிரில் இருப்பவர்களை ஏறிட்டார்.<br /><br /><br /><br />"சொல்லுங்க மாணிக்கம் இன்னும் என்னதான் பிரச்சினை அந்த இடத்திலே?"<br /><br /><br />"ஐயா! பார்ட்டி கிரயம் பண்ணுறதுலே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா அங்க குடி இருக்கிற காலணி ஆளுங்கதான் காலி பண்ண மாட்டோம்னு பிரச்சினை பண்ணுறாங்க போல"<br /><br /><br />"எல்லாரும் அப்படித்தானா, இல்லை முன்னாடி ரெண்டு மூணு பேரு விறைச்சிகிட்டு நிக்க மீதியெல்லாம் அவங்க சொல் படி முரண்டு பண்ணுறாங்களா?"<br /><br /><br />"ஆமாங்க, இதுலே ஒரே ஒரு ஆள்தான் எல்லாரையும் தூண்டி விட்டுகிட்டு இருக்காரு. பேரு செல்லத் துரை, சிட்டி டிரான்ஸ்போர்ட்ஸ்லே மேனேஜர் போல, யூனியன்லயும் செல்வாக்கான ஆளாம்"<br /><br /><br />"ஓஹோ! அதான் துள்ளுறானா? இன்னும் ஒரு தபா பேசிப் பாருங்க! அப்பவும் மசியலைன்னா சொல்லுங்க! பிரச்சினையை முடிச்சிடலாம்!"<br /><br /><br />சொல்லிக் கொண்டிருக்கும்போதே செல் போன் ஒலித்தது.<br /><br /><br />"ஹலோ! சொல்லுடா!'<br /><br /><br />".............."<br /><br /><br />" அப்படியா! சரி! உடனே வண்டி அனுப்புறேன்! நீ அங்கேயே இருடா!"<br /><br /><br />"................"<br /><br /><br />"ஓகே!"<br /><br /><br />தனது பி.ஏ. விடம் திரும்பினார்.<br /><br /><br />"யோவ்! என்னய்யா வண்டிய மெயிண்டெயின் பண்னுறீங்க? காலேஜ் போறதுக்குள்ளே பிரேக் டவுன் ஆகி நின்னிருக்குது!<br /><br />உடனே வேற வண்டிய அனுப்பு! போ!"<br /><br /><br />பி.ஏ பதை பதைத்து ஓடினான்.<br /><br /><br /><br />பத்து நிமிடங்களு மேல் ஆகியும் பொறுமை இழந்த நந்தினி மீண்டும் தனது செல் ஃபோனை எடுத்தாள்.<br /><br /><br /><br />"அண்ணே! எனக்கு டைம் ஆகுது! நான் ஆட்டோ பிடிச்சி பொயிக்கிறேன்"<br /><br /><br /><br />"ஐயோ! வேண்டாம்டா! வண்டி இப்ப வந்துடும்! கொஞ்சம் வெயிட் பண்ணுடா!"<br /><br /><br /><br />"போங்க அண்ணே! ஃபோன் பண்ணி 10 நிமிசம் ஆச்சு! இன்னும் கார் வரக் காணோம்!"<br /><br /><br /><br />"அட! பேசிகிட்டிருக்கிற நேரம் வந்துடும்டா! காலேஜ் போய்ச் சேர்ந்ததுன் எனக்கு ஒரு ஃபோன் போட்டுடு! சரியா?"<br /><br /><br /><br />"ச்சே!" என்றவாறு செல் ஃபோனைத் துண்டித்து கைப் பையில் வைத்தாள்!<br /><br /><br /><br />அப்போது மெதுவாக அவளைக் கடந்து சென்ற மோட்டர் சைக்கிளில் பயணித்தவனை சட்டென அடையளம் கொண்ட நந்தினி முகம் மலர்ந்தாள்.<br /><br /><br /><br />சற்று குரலை உயர்த்தி<br /><br /><br /><br />"ஹாய் சக்தி!" என்று அழைக்க<br /><br /><br /><br />வண்டியின் வேகம் முழுமையாய்க் குறைந்து நின்றது!<br /><br /><br /><br />திரும்பி வந்த சக்தி இவளைப் பார்த்ததும் புன்னகைத்தான்!<br /><br /><br /><br />"ஹாய் நந்தினி! என்ன இந்த இடத்துலே வெயிட்டிங்?"<br /><br /><br /><br />"போ சக்தி! ககர் பிரேக் டவுன் ஆயிடுச்சு! அண்ணன் வேற கார் அனுப்பி இருக்கார்! அதுக்குத்தான் வெயிட்டிங்க்!"<br /><br /><br /><br />என்று சலித்துக் கொண்டே சொன்னவள், சட்டென முகத்தில் பிரகாசம் காட்டினாள்.<br /><br /><br /><br />"சக்தி! நீயும் காலெஜ்க்குத்தானே போறே? நான் உன் கூடவே பைக்ல வந்துடறேனே!"<br /><br /><br /><br />"என்னாது! என் கூடவா? அம்மா தாயே! நீங்க உங்க வண்டியிலயே மெதுவா வாங்க! நான் கெளம்புறேன்! ஆளை விடு!" என்றான்.<br /><br /><br /><br />"என்ன சக்தி இது! அஸ் அ பிரண்ட்! இந்த ஹெல்ப் கூட செய்யக் கூடாதா? இல்லாட்டி என்னைக் கூட்டிகிட்டு போக பயமா?"<br /><br /><br /><br />"என்னாது பயமா? எனக்கா? வந்து உக்காருங்க சீட்லே!" என்றான்.<br /><br /><br /><br />நந்தினி தனது கூந்தலை பின்புறம் ஒதுக்கிவிட்டுக் கொண்டே அவனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்.<br /><br /><br /><br />"மணி அந்த டிரைவர் வந்தவுடன் நேரா காலெஜ்க்கு வரச்சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு,<br /><br /><br /><br />"ம் புறப்படலாம் சக்தி" என்றாள்.<br /><br /><br /><br />விபரீதத்தை விலை கொடுத்து வாங்கி இருப்பதை அறியாமல் வண்டியை உதைத்துக் கிளப்பினான். அவளது மனமோ உற்சாகத்தில் "ஊ ல லால்லா" என்று பாடியது!<br /><br /><br /><br />வண்டியின் வேகத்தில் பின்னலிடப் படாத அவளது கேசம் காற்றில் அலையாய்ப் பறந்தது.<br /><br /><br /><br />"சக்தி! கொஞ்சம் மெதுவாப் போயேன்! விழுந்துடுவெனோன்னு பயமா இருக்கு" என்று கூறிக் கொண்டே அவனது வலது தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.<br /><br /><br /><br /><div align="center"><strong>காலத்தின் குரல்</strong></div><br /><br /><br /><br /><br />இறந்த காலம் : ஐயோ! இவன் பழசை மறந்துட்டானா என்ன? தைரியத்தைப் பத்தி பேசினதும் டக்குன்னு கூட்டிகிட்டு கெளம்பிட்டானே!<br /><br /><br /><br />நிகழ் காலம் : மச்சி! டவுன்லே இதெல்லாம் சகஜம்டா! வண்டியிலதான கூட்டிகிட்டுப் போறான்! வாழ்க்கைலயா கூட்டிகிட்டுப் போறான்?<br /><br /><br /><br />எதிர் காலம் : பஞ்சும் நெருப்பும் இப்பத்தான பக்கத்துலெ வெச்சிருக்கென்! போகப் போகப் பாருங்க!<br /><br /><br /><br />தொடரும்.............................!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-25907872908543727002007-09-11T10:13:00.000-07:002010-12-09T08:47:21.647-08:00மாதங்களில் அவள் மார்கழி - 7<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/08/251-6.html">பகுதி 6</a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS9xjDUVL_yessJcezeKiOeeVgm7gRDzTefv-VEJzwYKuuR39PFB2f1omVq3MRHovt-XANlwrwMZHufoxtl9Hkt_O_oYbWcsV14U9MIpAGWfgv3kJOvu-Hquseo4yF2CciLHapPqHmvEw/s1600-h/valentines%20letter.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5108996683184842498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS9xjDUVL_yessJcezeKiOeeVgm7gRDzTefv-VEJzwYKuuR39PFB2f1omVq3MRHovt-XANlwrwMZHufoxtl9Hkt_O_oYbWcsV14U9MIpAGWfgv3kJOvu-Hquseo4yF2CciLHapPqHmvEw/s320/valentines%2520letter.bmp" border="0" /></a><br /><div>"என்னவனுக்கு,</div><div> </div><div>உனக்கெனப் பிறந்தவள் எழுதிக் கொள்வது. இங்கு நான் நலம், நீ நலமாய் இருக்கிறாய் என்று அறியப் பெற்றதால். </div><div> </div><div>இக்கடிதம் உன் கைக்கு வந்து சேரும் நேரத்தில் பல பேர் உன்னை வாழ்த்தி முடித்திருக்கலாம். ஆனாலும் என் கடிதத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருப்பாய் என்பது தெரியும்.</div><div> </div><div>உன் பிறந்த நாள் அன்று உன்னோடிருக்க முடியவில்லை என்று வருத்தம்தான். ஆனால் என்னடா செய்வது. இது காலத்தின் கட்டாயம் ஆயிற்றே! </div><div> </div><div>இரண்டாண்டுகளுக்கு முன்னால் இதே நாள் நினைவிருக்கிறதா உனக்கு?அன்றுதானே இனிப்பைத் தந்து விட்டு இதயத்தில் இடம் கேட்டாய்! </div><div>புதுச் சட்டை அணிந்து வந்து புயலை என்னுள் விட்டுச் சென்றாய்! அதைத்தானே நெஞ்சுக்குள் பொத்தி வைத்து வாழ்ந்து வருகிறேன். </div><div> நீ அருகில் இல்லாத நாட்களைக் கடத்த அந்த நினைவுகள்தானே என்னை இயங்க வைக்கின்றன. </div><div> </div><div>பரிசாய் என்ன அனுப்பலாம் என்று யோசித்தேன்! ஒன்றும் புலப்படவில்லை எனக்கு! என்னையே தந்த பின்னர் வேறென்ன தருவது உனக்கு! </div><div> </div><div>இருந்தாலும் என் நினைவுகளை உன்னோட இறுத்திவைக்க இத்தோடு இரண்டு முத்தங்கள். நீ இந்த வரிகளை வாசிக்கும்போது நான் கண்களை மூடிக் கொண்டிருப்பேன்! வெட்கமாக இருக்கும் அல்லவா எனக்கு?</div><div> </div><div>இவை உனக்கான மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல! எனக்கான உயிர்த்தலுக்கும்தான்!</div><div> </div><div>இப்படிக்கு,</div><div>என்றென்றும் உனக்காக,</div><div>உன்னவள்!</div><div> </div><div>மீண்டும் மீண்டும் படித்து முடித்தேன். எத்தனை முறையென்று தெரியவில்லை. </div><div>படிப்பதும் நெஞ்சின் மீது கவிழ்த்துக் கொள்வதுமாய்...... </div><div>வாழ்த்திய நண்பர்கள் யார் யாரென்று நினைவில் இல்லை. </div><div>எந்தெந்த பாடப் பிரிவுகள் வந்து சென்றன என்றும் புரியவில்லை.</div><div>நானும் வகுப்பில்தான் இருந்தேன். உடலால் மட்டும்!</div><div>உள்ளத்தில் அவளோடு கைகோர்த்து கடற்கரை மணலில் அவளோடு கால் புதைய நடந்து கொண்டிருந்தேன்.</div><div> </div><div>"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."</div><div> </div><div>புன்னகைத்தேன்.</div><div> </div><div>அழகான குரலில் எனக்கே எனக்கான தேவதை வாழ்த்துகிறாள்.</div><div> </div><div>"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."</div><div> </div><div>மீண்டுமா. சிரித்தேன்.</div><div> </div><div>"சக்தி.. ஆர் யூ ஆல்ரைட்" - பிடித்து உலுக்கினாள்.</div><div> </div><div>திடுக்கிட்டு விழித்தேன்.</div><div> </div><div>வகுப்பில் யாருமில்லை. நான் மட்டும் தனியே இருந்தேன்.</div><div> </div><div>எதிரில் கையில் பூங்கொத்தும், உதட்டில் புன்னகையுமாய் நந்தினி நின்றிருந்தாள்.</div><div> </div><div>"ஓ! ஸாரி.. கவனிக்கலை.." என்றேன்.</div><div> </div><div>"இட்ஸ் ஆல் ரைட்.. இன்னிக்கு உங்க பர்த் டேவாம், அதான் விஷ் பண்ணிட்டுப் போலாம்னு நானும் வெயிட் பண்ணினேன். திஸ் ஈஸ் ஃபார் யூ"</div><div> </div><div>என்று பூங்கொத்தை நீட்டினாள்.</div><div> </div><div align="center">-----------------------------------------------------------------------------------------<strong>காலத்தின் குரல்</strong> </div><div> </div><div><strong>நிகழ் காலம்</strong> : "மச்சி! ஆப்பு எத்தனை அலங்காரமா ரெடியாகுது பாத்தியா?"</div><div> </div><div><strong>இறந்த காலம்</strong>: "ஆமாம்டா! பாவம் இந்த பயபுள்ளை!"</div><div> </div><div><strong>எதிர் காலம்</strong> : "ஏண்டா இப்படி அவசரப் படுறீங்க? பொறுத்திருந்துதான் பார்ப்போமே! என்னதான் நடக்கப் போகுதுன்னு!"</div><div> </div><div> </div>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-53737640852413225102007-08-14T11:23:00.000-07:002010-12-09T08:47:21.691-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 6<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/08/249-5.html">பகுதி 5 </a><br /><br />எப்படியோ கவுன்ஸிலிங், அட்மிஷன், ஹாஸ்டல் எல்லாம் முடிந்து இன்றுதான் முதல் நாள் வகுப்பு.<br />முதன் முதலாக ஒரு கல்லூரி வாழ்க்கை. ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில். அதுவும் சென்னை.<br /><br />லேடரல் எண்ட்ரிதான்(நேரடியாக இரண்டாம் ஆண்டு). இருந்தாலும் முதல் நாள் வகுப்பில் கொஞ்டம் மிரட்சியாகத்தான் இருந்தது.<br /><br />தாவணியிலும், சுடிதாரிலும் பார்த்த பெண்களை இங்கே வித விதமான உடைகளில் காண முடிந்தது.<br />மாணவர்களிடமும் ஒரு மாதிரி எதைப் பற்றியும் கவலை கொள்ளாதது போலவே சிகையும், ஒரு அசால்ட்டான பாவனையும் மிகுந்திருந்தது. ஆனாலும் ஒரு வித தெளிவு இருந்தது அவர்களிடம்.<br /><br />வகுப்பிற்குள் நுழைந்ததும் மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கை காலி இருந்தது.<br /><br />"இங்கே யாராச்சும் வறாங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.<br /><br />"நோப், யூ கேன் ஜஸ்ட் சீட் ஹியர், எனிவே ஆர் யூ லேட்டரல் எண்ட்ரி?"<br /><br />"ஆமாம்"<br /><br />"ஐயாம் ராஜ்" என்று கை நீட்டினான்.<br /><br />"ஹாய், ஐ யாம் சக்தி" என்றேன்.<br /><br />மணி 9.15 ஆகியிருந்தது. ஆசிரியர் வரும் நேரம்தான். வகுப்பிற்குள் சல சலவென சத்தம் எழுந்து கொண்டே இருந்தது.<br /><br />"நம்ம பாலிடெக்னிக்கில்லெல்லாம் இந்நேரத்திற்கு எந்த சத்தமும் இருக்காதே, ஆசிரியர் வராவிட்டாலும் கூட" நினைத்துக் கொண்டேன்.<br /><br />"மச்சி, இன்னிகு ஃபர்ஸ்ட் அவர் நம்ம தருமி கிளாஸ்டா!" என்று சொல்லிக் கொண்டே ஒரு மாணவன் எங்களைக் கடந்து சென்றான்.<br /><br />"அது என்ன தருமி! பேர் வித்தியாசமா இருக்கே?" என்றேன்.<br /><br />"ஹிஹி.. அதுவா அவரோட உண்மையான பேர் புரொபெசர் சாம். பசங்களை எப்போ பாரு கேள்வி கேட்டுகிட்டு இருப்பாரு. அதனால சீனியர் பசங்க அவருக்கு வெச்ச பேரு தருமி. அவருக்குக் கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமாம்" என்றான் ராஜ்!<br /><br />அதற்குள் புரபொஸர் வகுப்பிற்குள் நுழைந்தார். புதிய மாணவர்களின் பெயர்களை கேட்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பைத் தொடங்கினார்.<br /><br />"ம். ஏறத்தாழ இன்னும் ரெண்டு மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வரப் போகுது. உங்கள்ள யாராருக்கெல்லாம் கோல்டு மெடல் வாங்குற எண்ணம் இருக்கு?" அனைவரையும் பார்த்துக் கேட்டார் சாம்.<br /><br />"ஆரம்பிச்சிட்டாருடா" என்று ராஜ் சலித்துக் கொண்ட அதே நேரம் எனது வலது விலாப் பகுதியில் சுரீரென்ற வலியை உணர்ந்த நான் சட்டென முழங்கைய்யை உயர்த்தி குனிந்து பார்த்தேன்.<br /><br />"வெரி குட்! இப்படிப்பட்ட ஸ்டூடண்ட்ஸைத்தான் நான் எதிர்பார்த்தேன். தம்பி யாருப்பா அது? எழுந்திருப்பா! உன் பேரென்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர் சாம்.<br /><br />மீண்டும் வகுப்பைக் கவனிக்க நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. என்னை நோக்கித்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. பின்புற இருக்கையிலிருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது.<br /><br /><br />"சார் அதுவந்து..! நான் அதுக்காக கை தூக்கலை சார்!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னது அவர் காதுகளில் விழவே இல்லை. எழுந்து வேறு நின்றாயிற்று.<br /><br />"குட்! அப்படித்தான் இருக்கணும்! உன் பேர் என்ன?" மீண்டும் கேட்டார்.<br /><br />"சக்தி"<br /><br />மீண்டும் விளக்கம் சொல்ல நினைத்தால் தொண்டையிலிருந்து வெறும் காற்று மட்டுமே வந்தது.<br /><br />"லேட்டரல் எண்ட்ரிதான? டிப்ளமோல எவ்வளவு பெர்சண்டேஜ்?"<br /><br />"97"<br /><br />"குட்! அப்போ நீ காம்படீட் பண்ணலாம்! நீ கோல்டு மெடல் வாங்குவே! ஐ பிலீவ் இட்!" என்றார் ஒரு புன்னகையுடன்.<br /><br />"என்னடா இது வம்பாப் போச்சே! பின்னாடி இருந்து எவனோ இடுப்புல குத்தி விட்டுட்டான்னு கை தூக்குனா இவரு இப்படி நினைச்சிகிட்டாறே! நினைச்சிக்கிட்டுமே! இப்ப என்ன ஆயிடுச்சு!" என்று எண்ணிக் கொண்டே அமைதியாக நின்றேன்.<br /><br />"மச்சி! நந்தினி சரியா டென்ஷன் ஆயிட்டாடா! பாரேன் கோல்டு மெடல் போட்டிக்கு ஒருத்தன் போட்டிக்கு வந்துட்டான்னதும் கோவமா நகம் கடிக்குறதை!" என்ற பின்புற இருக்கையின் கிசுகிசுப்புக் குரல் கேட்டு அப்படியே வலது புறம் திரும்பினேன்.<br /><br />தன் பெரு விரல் நகத்தைக் கடித்தவாறே கோபமுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.<br /><br />"அவள்தான் நந்தினியோ?"<br /><br />"சபாஷ் சரியான போட்டி" மீண்டும் பின்புற இருக்கையிலிருந்து சற்று பலமாகவே வந்த குரல் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.<br /><br />தொடரும்....................................!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-18656311456584104872007-08-08T12:05:00.000-07:002010-12-09T08:47:21.705-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 5<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/08/248-4.html">பகுதி 4</a><br /><br />அடுத்து வந்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை. பிரிய இருக்கிறோம் என்று கவலையுற்றே பிரியாமலே இருந்தோம். கவலைப் பட்டுக் கொள்வதற்கே சந்தித்தோம். மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரிந்தோம் அன்றைய பொழுது சாய்ந்ததும்.<br /><br />தினந்தோறும் நேசத்தின் மழையின் நனைந்தேன். அவ்வப்பொழுது அவளின் கண்ணீர் மழையினிலும்!<br />ரிசல்சட் வந்த அன்று 97% மதிப்பெண் பெற்றதத அறிந்து என்னை விடவும் அதிகம் மகிழ்ந்தவளும் அவள்தான்! அதை விட அதிகமாய் அழுதவளும் அவள்தான்! அதிகப் படியான மதிப்பெண்கள் எங்களுக்கிடையில் தொலைவை அதிகமாக்கும் என எண்ணியிருந்தாள் போலும்.<br /><br />"மண்டு! எவ்வளவு தொலைவு போனாலும் நான் உன்னோடதானடி இருப்பேன்?"<br /><br />"எப்படி?" என்றாள் கண்களை அகல விரித்தபடி. ஒன்றும் தெரியாதவள் போல் நடிப்பதில் கில்லாடி.<br /><br />"இப்படி" என்றேன்.சட்டென அவள் கை விரல்கள் பற்றி என் இதழோடு சேர்த்து ஒரு முத்தமிட்டேன்.<br /><br />"ச்சீ! போடா! ஏன் இப்படி என் உசிரை வாங்குறே?" என்றாள்.<br /><br />"அட! என் உசிரைத்தானடி நான் வா ங்குறேன்" என்றேன்.<br /><br />"உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" என்றாள்.<br /><br />"ஆமாம்! என்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" கண்சிமிட்டினேன்.<br /><br />"போடா பொறுக்கி!" பொய்க்கோபம் காட்டினாள்.<br /><br />இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு விதமாய்.<br /><br />சீண்டிப் பார்த்து சிதறிப் போனோம் . தீண்டிப் பார்த்து திக்குமுக்காடினோம்.<br /><br />பரிகசித்துக் கொண்டோம். பரிதவித்துக் கொண்டோம்!<br /><br />பங்குனித் தேர்த்திருவிழாக் கடைகளில் இன்னும் கூட்டம் இருந்தது.<br />மலைக் கோட்டைக் குளக்கரையில் வண்ண வண்ண பொம்மைகள், வளையல்கள், வீட்டு உபயோகச் சாமான்கள், அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள்.. திருவிழா முடிந்த ஒரு மாதம் இன்னும் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தன.<br /><br />அவளை கடைக்கு அழைத்து வந்தேன்.<br /><br />"வேணுங்கறதெல்லாம் வாங்கிக்க!"<br /><br />"ஒண்ணும் வேணாம்டா எனக்கு"<br /><br />எனக்குப் புரிந்தது.<br /><br />நானே எனக்குப் பிடித்த வளையல்களை வாங்கி அவள் கைகளில் மாட்டினேன். அவள் மனசு நெகிழ்ந்தது. வளையல் சுலபமாய் நுழைந்தது!<br /><br /><br />எதிர்பார்த்திருந்த நாள் வந்தே விட்டது. எதிர்பாராதிருந்த நாளும் அதுதான் என அவள் சொல்லிக் கொண்டாள்.<br /><br />ஆம்! கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடுதாசியில் வந்திருந்தது.<br /><br />அன்றுதான் அவள் முகம் தொட்டுக் கண்ணீர் துடைத்தேன்!<br /><br />என் விரல் பற்றி முத்தமிட்டாள்.<br /><br />அன்றுதான் முதல் முறையாக பிரிவு பற்றி எனக்குள்ளும் கலக்கம் ஏற்பட்டது.<br /><br />தைரியம் சொல்லிக் கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தேன்.<br /><br />"என்னை விட்டுப் போயிடாதடா?" கண்ணீருடன் அன்றைய சந்திப்பை முடித்து வைத்தாள்.<br /><br /><br /><br />தொடரும்...................!<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/08/251-6.html">பகுதி - 6</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-83070794658128662782007-08-07T12:31:00.000-07:002010-12-09T08:47:21.721-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 4<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/07/245-3.html">பகுதி - 3</a><br /><br />வினாத்தாள் கையில் வந்து சேர்வதற்குள் வியர்வை ஆறாய் ஓடிவிட்டது. கடைசித் தேர்வு இது.<br />இது வரை எழுதிய அனைத்தும் நன்றாகச் செய்து விட்டேன். இன்று ஏனோ இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. ஒரு மார்க் விட்டாலும் கவுன்சிலிங்கில் ரேங்க் மாறும் என்பது தெரியும். அதுக்கு வாய்ப்பு கொடுக்கலாகாது.<br /><br />வினாத்தாளை வாங்கிப் பார்த்ததும்தான் அப்பாடா என்றாகியது. எல்லாம் தெரிந்த வினாக்கள்தான். நிதானமாகத் திட்டமிட்டு எழுதலாம். பெரும்பாலான வினாக்களுக்கு வரைபடமும், விளக்கமும் இருந்தாலே போதும். மற்றவை நிரல்கள் எழுதுவதுதான். விளக்கமாக எழுதவேண்டியவை சில வினாக்கள் மட்டுமே.<br /><br />ஐந்து வினாடி கண்களை மூடி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.<br /><br />அவள் என் தலை கோதினாள். விரல்களைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீருடன் முகவாய் தொட்டு என் முகத்தை நிமிர்த்தினாள்.<br /><br />"டேய்! நிஜமாவே நீ மெட்ராஸ் போயிடுவியா?". என் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.<br /><br />"ச்சே! என்ன நினைப்பு இது? என்னை சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நானே கடிந்து கொண்டேன்.<br /><br />விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தேன்.<br /><br /><br />சரியாக இரண்டரை மணி நேரத்திற்குள் எழுதி முடித்தேன். பத்து நிமிடம் விடைகளைச் சரிபார்த்து தாள்களை இணைத்துக் கட்டி கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன்.<br /><br />நான் வெளியே வந்தபொது எனக்கு முன்பே தேர்வை முடித்துவிட்டு பலர் வெளியே காத்திருந்தனர்.<br /><br />தோளில் கை போட்டவாறு உடன் நடந்தான் சிவா!<br /><br />"டேய் சக்தி! இன்னியோட முடிஞ்சுதாடா நம்ம பாலி டெக்னிக் லலஃப்?"<br /><br />"ஏய் என்னாச்சு! பாலி டெக்னிக் முடிஞ்சா என்னடா? அதான் அடுத்து காலேஜ் படிக்கப் போறமே?"<br /><br />"அப்பவும் இதே மாதிரி ஒரே காலேஜ்ல, ஒரே கிளாஸ்ல இருப்போமா சக்தி?"<br /><br />"..."<br /><br />"என்னடா ஒண்ணும் பேச மாட்டேங்குறே? சொல்லுடா நாம இதே மாதிரி ஒண்ணா இருப்பமாடா?" அவன் குரல் தழுதழுத்தது.<br /><br />"சொல்லுடா சக்தி" என்று என்று மீண்டும் என்னை உலுக்கினான்.<br /><br />நான் அழுது கொண்டிருந்தேன்.<br /><br />துள்ளித் திரிந்த அந்த குதூகலமான நாட்கள் என் நெஞ்சில் வந்து போயின. வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் கலாய்த்தலும், காமெடியுமாய்.. என்னையும் சிவாவையும் தனித்தனியே பார்ப்பதே அரிது அந்த நாட்களில்.<br /><br />மூன்று வருடங்களும் ஒரே வகுப்பு. அடுத்தடுத்த இருக்கை.<br /><br />எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது.<br /><br />"மீண்டும் ஒன்றாய்ப் படிக்க முடியுமா?"<br /><br />அவனும் சத்தமாக அழத் தொடங்கி இருந்தான்.<br /><br /><br />தொடரும்...............................................!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-35315341827317275492007-07-25T11:38:00.000-07:002010-12-09T08:47:21.736-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 3<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/07/244-2.html">பகுதி - 2</a><br /><br />8.30 மணி ராஜகோபால் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். இப்போதே மணி 8 ஆகியிருந்தது. அவசரமாக இட்லியை விழுங்கிக் கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தை அடைய எப்படியும் 15 நிமிடம் நடந்தாக வேண்டும்.<br /><br />"இன்னும் ஒரே ஒரு இட்லியாவது வெச்சிக்கோடா" என்ற அம்மாவின் குரலைப் பொருட்படுத்தாது, தட்டை வாஷ் பேசினில் போட்டுக் கை கழுவிக் கொண்டு ஷூவை மாட்டலானேன்.<br /><br />பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே விளம்பர காண்ட்ராக்டரின் ஒலி பெருக்கி தனது வழக்கமான<br />"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்ற பாடலுடன் தனது பணியைத் துவங்கி இருந்தது.<br /><br />பாடல் முடிவதற்குள் பேருந்து வந்துவிடும். வழக்கமாக இது நடப்பதுதான். 8.30 மணிக்கு வந்த வேகத்தில் புறப்படும் பேருந்து சரியாக 9.00 மணிக்குள் வண்டி கேட் ஸ்டாப்பிங்கை அடைந்துவிடும்.<br />இறங்கி ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்குள் சென்று அமர்வதற்குள் முதல் பீரியட் ஆசிரியர் உள்ளே வந்து விடுவார்.<br /><br />அடித்து பிடித்து பேருந்திற்குள் ஏறியதும் வழக்கம் போல ஜூனியர் மாணவன் வடிவேலு சீட் போட்டு வைத்திருந்தான்.<br /><br />வகுப்பிற்குள் நுழையும் முன்னரே<br />"டேய் சக்தி, பிரின்ஸி ரூமுக்கு வரச் சொல்லி இருக்காங்களாம், போய்ப் பார்த்துட்டு வந்துடு, நேத்து என்ன பண்ணினியோ தெரியலை"<br /><br />நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பாலன்.<br />கேட்டதும் வியப்பாக இருந்தது.<br /><br />"அட்டெண்டன்ஸ்லாம் 96%க்கு மேல வெச்சிருக்கேனே" என்ற யோசனையுடன் பிரின்ஸிபால் அறை நோக்கி நடந்தேன்.<br /><br />அங்கே ஏற்கனவே மற்ற டிபார்ட்மெண்ட்களில் இருந்தும் கூட இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர். "அட! எல்லாருமே நல்லா படிக்குற பசங்கதான், அப்போ பிரச்சினை ஏதும் இருக்ககது" என்று எனக்கு நானே சமாதானம் ஆனேன்.<br /><br />எனது டிபார்ட்மெண்ட் சிவாவும் அங்கேதான் நின்றிருந்தான்.<br />"மச்சான்! பெரிசா லெக்சரர் கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன்"<br /><br />சிறிது நேரத்தில் காத்துக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் உள்ளே வரச் சொன்னதாக பியூன் வந்து சொன்னார்.<br /><br />உள்ளே சென்று அவரது டேபிளைச் சுற்றி நின்றோம்.<br /><br />எல்லோரும் வந்தாயிற்றா எண்று உறுதிப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார் பிரின்ஸிபால்.<br />"உங்களையெல்லாம் எதுக்கு வரச் சொல்லி இருக்கேன் தெரியுமா? வருஷா வருஷம் நம்ம பாலிடெக்னிக்கிலே டிப்ளமோ படிக்குற பசங்க குறைந்த பட்சம் பத்து பேராவாது நல்ல பெர்சண்டேஜோட வெளிய போயி, கவர்மெண்ட் கோட்டாவிலயே இன்ஜினியரிங்க் காலெஜ்ல சீட் வாங்குறாங்க. அதுவும் கவர்மெண்ட் காலெஜ்லயே ஃபுல் மெரிட்ல போறாங்க!<br /><br />அந்த வகைல உங்க பெர்பர்மான்ஸ் எல்லாம் நாங்க பார்த்துகிட்டுதான் இருக்கோம்! இது வரைக்கும் நீங்க எல்லாருமே 90 க்கு மேல பெர்சண்டெஜ் வெச்சிருக்கீங்க! இந்த செமஸ்டர்தான் கடைசி செமஸ்டரும் கூட! நீங்க இப்பதான் கவனமா இருக்கணும்!<br /><br />கொஞ்சம் கூட கவனத்தைச் சிதறவிடாம இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சீங்கன்னா நீங்க 95 பர்சண்டேஜ் கண்டிப்பா வாங்கிடலாம்!<br /><br />அதுதான் நீங்க எங்களுக்கு செய்ய வேண்டியது! எங்களுக்கு மட்டுமில்லை! உங்களைக் கஷ்டப் பட்டு படிக்க வைக்குற உங்க பேரண்ட்ஸ்க்கும் நீங்க செய்ய வேண்டியது இதுதான்! மேல படிச்சி நல்ல வேலைல சேர்ந்து, நிறைய சம்பாதிச்சி கொடுப்பீங்கங்குறது அப்புறம்! இப்ப இருக்குற நிலைமைல மேற்கொண்டு இன்ஜினியரிங் காலேஜ் சேர்க்கணும்னா என்ன செலவாவுமோ, எவ்வளவு செலவாவுமோன்னு அவங்களைக் கவலைப் பட விடாம நீங்க எல்லாரும் மெரிட் கோட்டாவுல சேர்ந்து அவங்களுடைய பாரத்தைக் குறைக்கணும். அதுதான் முக்கியம்! என்ன புரிஞ்சிதா!<br /><br />இதுதான் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது. நீங்களும் நல்லா படிங்க! உங்க ஃபிரண்ட்ஸ்க்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் நல்ல மார்க்கோட பாஸ் செய்ய வையுங்க!<br /><br />ஆல் த பெஸ்ட்!<br /><br />நீங்க இப்ப போகலாம்"<br /><br />ஒரே மூச்சில் பேசி முடித்து எங்களை வகுப்பிற்குச் செல்ல அனுமதித்தார்.<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/08/248-4.html">தொடரும்............................................................!</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-17975615293641035312007-07-22T10:10:00.000-07:002010-12-09T08:47:21.754-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 2<a href="http://shibispadaippugal.blogspot.com/2007/07/242-1.html">பகுதி 1 </a><br /><br />உள்ளங்கையில் துளசியை ஏந்தியவாறே வலம் வந்தோம்.<br /><br />"ம்க்கும்" தொண்டையைக் கணைத்து என் இருப்பை நினைவூட்டினேன்.<br /><br />"..."<br />என்ன என்று கேட்பது போல் தலை திருப்பினாள்.<br /><br />"எதுனா பேசுறது! ஒண்ணுமே பேசாம போனா எப்படி?"<br /><br />"கோயில் வந்தது சாமி கும்பிட, உன் கூட பேச இல்லை"<br /><br />"அது சரி. அப்போ நான் வராம இருந்தா மேடம் ஏன் கோவிச்சிக்கணும்?"<br /><br />"நீங்களும் கோயிலுக்கு வரணும். ஆனா பேசணும்னு அவசியம் இல்லை, அதான்!"<br /><br />"அட!"<br /><br />"சரி சரி! எல்லாரும் பார்க்குறாங்க! பிரசாதம் வாங்க வரிசைல நில்லு"<br /><br />ஆளுக்கொரு புளியோதரை நிறைந்த தொண்ணையுடன் படிக்கட்டில் இறங்கினோம். ஏறத்தாழ அனைவரும் சென்றுவிட்டிருந்தனர் ஓரிருவரைத் தவிர.<br /><br />"முண்டம், ஏண்டா லேட்டு?"<br /><br />"என்னது முண்டமா?"<br /><br />களுக்கென்னு சிரித்தாள்.<br /><br />"பின்னே லேட்டா வந்தா ஏங்க மிஸ்டர் லேட்னு கேக்கணுமா?"<br /><br />"அதுக்காக முண்டம்னு சொல்றதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்"<br /><br />"இதுக்கே இப்படின்னா...!"<br /><br />"என்ன இதுக்கே இப்படியா? அப்போ இன்னும் என்னவெல்லாம்டி சொல்லுவே?"<br /><br />"தோ பாரு! இந்த டீ போடுற வேலையேல்லாம் வேண்டாம்"<br /><br />"பின்னே நீ மட்டும் முண்டம்னு சொல்லுவியா?"<br /><br />"சரி! விடு! நீ பாட்டுக்கு உன் லேட்டா வந்தா என்ன அர்த்தம், நான் தேடிகிட்டே இருந்தேன் தெரியுமா?"<br /><br />"ஓ! சாரிப்பா! அதான் வந்துட்டேன்ல! நேத்து கொஞ்சம் அசைன்மெண்ட்ஸ் அதிகம் குடுத்துட்டாங்க! ஃபைனல் இயர் வேற! அதான் எழுதி முடிக்கும்போது மணி 12.30 ஆயிடுச்சு! நல்லாத் தூங்கிட்டேன்"<br /><br />"அப்போ நல்லாத் தூங்கலையா என் செல்லம்"<br /><br />"இல்லை! ரேடியோல பாட்டைக் கேட்டவுடன் விழுந்தடிச்சிட்டு எழுந்து குளிச்சிட்டு ஓடியாந்தேன்"<br /><br />"ம்ம், இப்போ கடைசி வருசம், முடிச்சதும் ஐயாவுக்கு என்ன திட்டமோ? வேலை தேடுறதுதான?"<br /><br />"என்னது வேலையா" வெறும் டிப்ளமோ முடிச்சிட்டு வேலைக்குப் போனா, உன்னை வெச்சி குடும்பம் நடத்துற அளவுக்கெல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா! அடுத்து ஐயா எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேரப் போறேனாக்கும்"<br /><br />"ஓ! இஞ்சினியரிங்க் காலேஜ் நம்ம ஊர்லே கிடையாதே! வேற ஊருக்குப் போயிடுவியா?"<br /><br />"ஆமா! ஆனா மூணே மூணு வருஷம்தான்"<br /><br />"மூணு வருஷமா? ஐய்யோ! எப்படிடா என்னை விட்டுட்டு இருக்கப் போறேன்னு இவ்ளோ கூலா சொல்லுறே? எனக்கு கேட்டவுடனே திக்குங்குது"<br /><br />"வேற என்ன பண்ணுறது? நான் தூரமா போனாலும் என் மனசுக்குள்ளே நீ இருந்துகிட்டே இருப்பியாம். நான் உன் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருப்பனாம், மூணு வருஷம் மூணே நிமிஷமா ஓடிடுமாம், இஞ்சினியரிங் முடிச்சதும் நல்ல வேலைல உக்காரணும். நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும், நான் உன்னை மகாராணி மாதிரி வெச்சி காப்பாத்துவேனாம்"<br /><br />"நிஜமாவா! வேற ஊருக்குப் போனதும் என்னை மறந்துட மாடியே"?<br /><br />"சத்தியமா என் செல்லம்! என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல, நீ வேணா பாரேன் இந்த அரங்க நாதர் கோயில்ல வெச்சி சொல்லுறேன், நமக்கு இதே கோயில்ல வெச்சித்தான் கல்யாணம் தடபுடலா நடக்கும் பாரேன்"<br /><br />அதே நேரம் கோவில் ஒலிபெருக்கியில்<br /><br />"<a href="http://divya-prpandam.blogspot.com/2006/08/periyazhavars-thiruppallandu.html">பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்விதிருக் காப்பு</a>."<br /><br />என்று பாசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.<br /><br />"பார்த்தியா! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று பெரியாழ்வாரே நம்மை ஆசீர்வதிக்குறா மாதிரி இருக்குதுல்ல" என்றேன்.<br /><br />சாந்தமான புன்னகையுடன் ஆமோதித்தாள்.<br /><br />ஆயினும் அவள் கண்களில் கொஞ்சம் கவலை குடி கொண்டிருந்ததை கவனிக்கத் தவறவில்லை நான்.<br /><br />தொடரும்......................................!<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/07/245-3.html">பகுதி - 3</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-9611906880333052632007-07-18T11:24:00.000-07:002010-12-09T08:47:21.787-08:00மாதங்களில் அவள் மார்கழி! - 1<div align="center"></div><p>"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,<br />தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்<br />மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; "<br /><br />கோவில் ஒலிபெருக்கியில் கசிந்து கொண்டிருந்த திருப்பாவைப் பாடல், என்னை எழுப்பியது.<br />"அடச் சே! இவ்ளோ நேரம் ஆச்சே! நல்லாத் தூங்கிட்டேனோ"<br /><br />அவசர அவசரமாய் போர்வையை உதறி எழுந்தேன். பிரஸ்ஸையும் பேஸ்டையும் கையிலெடுத்துக் கொண்டு டவலை எடுத்துத் தோளில் போடுக் கொண்டேன்.<br /><br />இன்னிக்கு கோவிச்சிக்கப் போறா! எப்படி சமாளிக்கப் போறேனோ!<br /><br />குளியல் முடித்து பேண்ட், சட்டை மாட்டி வேகமாக தெருவில் இறங்கினேன்.<br />"அம்மா! கதவைத் தாழ் போட்டுக்குங்க" உட்புறம் நோக்கிச் சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினேன்.<br /><br />சில்லென்ற மார்கழிக் காற்று முகத்தில் அறைந்தது. இந்த மார்கழிப் பனியும், சில்லென்ன காற்றும் அனுபவித்து உணர வேண்டியது. சொல்லி உணர வைக்க முடியாது. அதுவும் விடிந்தும் விடியாத இந்த மார்கழியின் அதிகாலைப் பொழுது இருக்கிறதே! ஆஹா! சுகமோ சுகம்! வருடம்தோறும் மார்கழியாய் இருந்தால் என்ன?<br /><br />கோயில் சென்று சேரும்போது கோவில் ஒலிபெருக்கி<br /><br />"பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே<br />போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே<br />சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே<br />கோல விளக்கே கொடியே விதானமே"<br />என்று பாடிக் கொண்டிருந்தது.<br /><br />இதைப் பாடிக்கொண்டிருக்கும் குரல்களில் அவள் குரலும் உண்டு!<br /><br />பாம்பணையில் பள்ளி கொண்டவனைப் படிகளேறித் தரிசிக்க வேண்டும். வேக வேகமாய் படிகளில் பறந்தேன். அந்தக் குளிரிலும் நெற்றியில் சிறிது வேர்த்தது.<br /><br />பஜனைக் குழுவை நெருங்கியதும் பாடலைப் பாடிக் கொண்டே சிலர் நிமிர்ந்தனர்.<br />அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, இன்னும் திறக்காத பரந்தாமனின் கதவுகளை நோக்கியும் ஒரு கும்பிடு போடு விட்டு ஆண்கள் பகுதியில் சென்று அமர்ந்தேன்.<br /><br />அடுத்த பாடல் ஆரம்பித்தது. எனது குரலும் குழுவினரோடு இணைந்தது.<br /><br />சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து<br />உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்<br />பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து<br />நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது<br />இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!<br />எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்<br />உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்<br />மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்<br /><br />பாடலை உதடுகள் முணுமுணுத்தவாறே கண்கள் தேட ஆரம்பித்தன!<br /><br />அதோ அழகிய சிற்ப வேலைப் பாடுகளோடு கூடிய அந்தத் தூணுக்கு அருகே,<br />ஊதா நிறத் தாவணியும், சற்று ஈரம் காயாத கேசத்தில் முடிந்தௌ வந்த மல்லிகைச் சரமுமாய்..<br /><br />அட! அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பாடலைப் பாடியவாறே ஒரு புன்னகை! யாரும் அறியா வண்ணம்! நானும் புன்னகைத்தேன்!<br /><br />தொடரும்...........................................! </p><p><a href="http://pithatralgal.blogspot.com/2007/07/244-2.html">பகுதி 2</a></p>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-75010713287338910642006-03-15T19:04:00.000-08:002010-12-09T08:47:22.044-08:0072 : அமானுஷ்ய வாசகி #13<div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/71-12.html">இது வரை</a><br /><br />இன்ஸ்பெக்டர் தேவசகாயம் புன்முறுவலுடன் கூறினார்.<br /><br />"ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சிவப்பிரகாஷ்! இது வரை வசந்தியோட கணவனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாலததால் வேற வழியில்லாம அந்தப் பொண்ணு இறந்தது ஒரு சமையலையில் நடந்த விப த்துதான்னு ஃபைலை குளோஸ் பண்ணினோம். நல்ல வேளையா அந்த பொண்ணே தன் கைப் பட எழுதின லெட்டர்ஸக் கொண்டு வந்தீங்க, இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் சட்டத்துல இருந்து தப்பிக்கக் கூடாது சார், எப்படியும் 4 வருஷம் உள்ள இருக்க வேண்டியிருக்க இருக்கும்னு நினைக்கறேன்"<br /><br />"கண்டிப்பா சார், இந்த பாழாய்ப்போன வரதட்சணையால இன்னும் இதுபோல எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருக்கோ, உங்களுக்குதான் முக்கியமா நன்றி சொல்லணும், முடிஞ்சி போன கேஸா இருந்தாலும் மறுக்காம புகாரை ஏற்று எல்லாரையும் மறுபடி விசாரணை செஞ்சி துரிதமா நடவடிக்கை எடுத்திருக்கீங்க"<br /><br />"அப்படியில்லை சார், எங்களுக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் அப்போ கிடைக்கலே! எனிவே தாங்க் யூ மிஸ்டர் சிவப்பிரகாஷ், தங்க் யூ மிஸ்டர் சக்தி, கிளம்பறேன்"<br /><br />சிவப்பிரகாஷைப் பார்த்தான் சக்தி. ஏதோ ஒரு நிம்மதி தெரிந்தது அவன் முகத்தில்.<br /><br />"அப்புறம் என்ன! நீ எப்போ வெளியூர் கிளம்பப் போறே?"<br /><br />"நல்லா சொல்லுங்க சக்தி, திரும்பவும் பேனாவும் பேப்பருமா எங்கியாவது உட்கார்ந்திகிட்டிருக்கப் போறாரு" தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டியவாறே வெளியில் வந்தாள் தாரா.<br /><br />"தாரா, சக்தி... நானும் யோசிச்சேன்.. பையனையும் அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கப் போறோம், அதனால இப்பவே ஒரு 15 நாள் அந்தமான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் நேத்தே டிக்கெட்ஸ் எடுத்துட்டேன்."<br /><br />சக்தி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் தன் மகன் அஷோக்குடன் சேர்ந்து கொண்டு "ஐய்யா.. அந்தமான் போகப் போறோம்.." என்று உற்சாகமானாள் தாரா.<br /><br />சக்தியும் தனது வீட்டிற்குக் கிளம்பினான். நன்கு காய்ச்சிய பசும்பாலை குறைந்த அளவு சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு சிவாவின் மேசைக்கருகில் வந்தாள் தாரா.<br /><br />"என்னங்க, என்ன பண்ணுறீங்க இப்போ? டாக்டர் அங்கிள்தான் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாருல்ல?"<br /><br />அவளை அன்பாக நோக்கிய சிவா<br />"இப்போ கதை எழுதல டியர், அந்தமான்ல என்னோட வாசகர்கள் சில பேரு இருக்காங்க, அவங்களை சந்திக்கறதுக்காக அவங்க முகவரியெல்லாம் எடுத்து வெச்சிகிட்டிருக்கேன்...."<br /><br />"ஐயோடா... வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறியாச்சா? எப்படியோ போங்க சாமி" என்றவாறு டம்ளரை மேசை மீது வைத்து விட்டு நகர்ந்தாள்.<br /></div><div align="center"><br />-: முற்றும் :-</div><div align="center"></div><div align="left"><span style="font-size:85%;color:#ff0000;">டிஸ்கி : கதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. </span></div><p><span style="font-size:85%;color:#ff0000;"><span style="color:#000000;">சிறு கதையாய் ஆரம்பித்து ஒரு தொடர் கதையாய் முடித்திருக்கிறேன். எனக்கு இது ஓர் நல்ல அனுபவமே .விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 13 பகுதிகளையும் தொடர்ந்து படித்த (ஓரிரு!?) வாசக உள்ளங்களுக்கும், பொறுமையிழந்து (கடுப்பாகித்தான்) பாதியில் விட்ட வாசக அன்பர்களுக்கும் திகில் கதையோ என நினைத்து திரும்பிப் பார்க்காமல் ஓடிய அனைவருக்கும் என் நன்றி.</span></span></p><p><span style="font-size:85%;"></span></p><p><span style="font-size:85%;color:#ff0000;"><span style="color:#000000;"></span></p><div align="left"><span style="color:#3333ff;">முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே</span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><span style="color:#3333ff;"><a href="http://pithatralgal.blogspot.com/2006/01/1.html">பகுதி #1 </a></span></div><div align="left"><span style="color:#3333ff;"></span> </div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/01/2.html">பகுதி #2</a></div><div align="left"> </div><div align="left"></div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/01/3.html">பகுதி #3</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/01/4.html">பகுதி #4</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/01/5.html">பகுதி #5</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/02/6.html">பகுதி #6</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/02/7.html">பகுதி #7</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/02/8.html">பகுதி #8</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/02/9.html">பகுதி #9</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/68-10.html">பகுதி #10</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/69-11.html">பகுதி #11</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/71-12.html">பகுதி #12</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/72-13.html">இறுதிப் பகுதி #13</a></div><div align="left"></div><p></p><br /></span>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-46547739151021935662006-03-15T15:21:00.000-08:002010-12-09T08:47:22.062-08:0071 : அமானுஷ்ய வாசகி #12<a href="http://pithatralgal.blogspot.com/2006/03/69-11.html">இது வரை</a><br /><br />மிக நீண்ட மொனத்திற்குப் பிறகு சக்தி தொடர்ந்தான்.<br /><br />"சோ, அந்த வசந்தியோட ஆவிதான் சிவாவை ஆட்கொண்டிருக்குன்னு சொல்றீங்களா டாக்டர்?"<br /><br />"யெஸ்! யூ ஆர் அப்சல்யூட்டலி ரைட்"<br /><br />"ஆனா அந்த ஆவியால இதுவரை எந்த தொந்தரவும் இல்லையே டாக்டர்?"<br /><br />"கரெக்ட் அந்த ஆவியின் நோக்கமே மற்றவங்களுக்கு தொந்தரவு கொடுப்பதல்ல, தான் இறந்தது பிரசவத்துல அல்ல, தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் தானே மேற்கொண்ட தற்கொலைன்னு தெரியப் படுத்தனும்"<br /><br />"இருக்கட்டும் ஆனா அதுக்கு சிவாவை ஏன் டாக்டர் தேர்ந்தெடுக்கனும்?"<br /><br />"நல்ல கேள்வி, யாரிடமும் மனம் விட்டு சொல்ல முடியாத விஷயங்களைக் கூட ஒரு வாசகியா நிறைய கடிதங்கள் மூலம் அந்தப் பொண்ணு இவருக்கு எழுதியிருக்கா. இவரு எல்லா கடித்துக்கும் பதில் எழுதலைன்னாலும் அந்தப் பொண்ணு வசந்திக்கு தன் மனக் குமுறல்களுக்கு ஓர் வடிகாலா இருந்தது சிவாதான். மேலும் தன்னோட கதைகளில் இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் படியா எழுதறதுனால நிஜத்திலும் தனக்கொரு நல்ல முடிவை சிவாவால் தான் தர முடியும்னு வசந்தி ஆழமா நம்பியிருக்கா. அதனோட விளைவுகள்தான் சிவாவை ஆட்கொள்ள நினைச்சது!"<br /><br />"இப்போ சிவாவை எப்படி குணப்படுத்தரது டாக்டர்?"<br /><br />"சிம்பிள், அந்தப் பொண்ணு கொடுமைகள் செய்யப்பட்டிருக்கான்னு சொல்றதுக்கு உண்டான ஆதாரங்கள் இல்லைன்னுதான் காவல் துறை இது தற்கொலை இல்லைன்னு முடிவுக்கு வந்திருக்காங்க! சிவாகிட்டே இருக்கும் கடிதங்கள்தான் அதுக்கு ஆதாரமே. அவைகளை வெச்சி வசந்தி கணவன் மேல நடவடிக்கை எடுத்தா போதும். அந்தப் பொண்ணு சிவாவை விட்டுடும்"<br /><br />"நான் சிவாகிட்டா பேசினப்போ கூட அந்த மாதிரி கடிதங்கள் பத்தி எதுவும் என்கிட்ட சொல்லலியே டாக்டர்"<br /><br />"உங்கிட்ட பேசும்போது சாதாரண எழுத்தாளனா உங்க ஃபிரண்டு சிவாவா பேசியிருக்கலாம், அதனால ஒரு வாசகியோட பெர்சனல் லெட்டெர்ஸை உங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கலாம்,<br />மறுபடி பேசிப் பார்த்தால் எங்கே வெச்சிருக்கார்னு தெரியவரலாம்"<br /><br /><br />"ஓ.கே டாக்டர், சரி நான் கிளம்பரேன்." என்று எழுந்தான் சக்தி.<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/72-13.html">இதற்குப் பின்</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7475917085038823295.post-83380942704133577212006-03-15T09:49:00.000-08:002010-12-09T08:47:22.076-08:0069 : அமானுஷ்ய வாசகி #11<a href="http://pithatralgal.blogspot.com/2006/03/68-10.html">இது வரை</a><br /><br />கோயம்பேடு பேருந்து நிலையம். சக்தி அந்த முன் பதிவு மையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். முன்பதிவுக் கவுண்டரில் இருந்த ஆள் நிமிர்ந்து பார்த்தார்.<br /><br />"எக்ஸ்கியூஸ்மி, இங்க மிஸ்டர் ராஜமாணிக்கம்.."<br /><br />"ஓ ராஜமாணிக்கமா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், இப்ப வந்துடுவார்.. அதோ வந்துட்டார் பாருங்க.." என்று கை காட்டினார்.<br /><br />உள்ளே நுழைந்தவாறே "யார் என்னைப் பார்க்கவா வெயிட் பண்றீங்க? அட நீங்களா? அந்த ரிசர்வேஸன் ஸ்லிப் எடுத்து வெக்கச் சொன்னீங்களே!"<br /><br />"ஆமாம் சார், எடுத்து வெச்சீங்களா?'<br /><br />"அதை அடுத்த நாளே எடுத்து வெச்சிட்டேன், ரெண்டே நாள்ள வரதா சொல்லிட்டு போனீங்க, ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சி, சரி இருங்க எடுத்துகிட்டு வரேன்" என்றவாரு உள்ளே நுழைந்தார்.<br /><br />சில நிமிடங்களுக்குப் பிறகு<br /><br />"இந்தாங்க சார் அவர் கொடுத்த ரிசர்வேஷன் ஸ்லிப்போட காப்பி"<br /><br />"ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றவாரே இப்போது ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர் கையில் திணித்தான் சக்தி.<br /><br />அவனுக்கு வியப்பாக இருந்தது. ரிசர்வேஷன் ஸ்லிப்பில் அவன் பெயரும் , சிவா பெயரும் சரியாகவே இருந்தது. இவரும் ரிசர்வேஷன் செய்ய வந்தது சிவாதான் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் இதில் இருக்கும் எழுத்துக்கள் மட்டும் சிவாவின் எழுத்துக்களுடன் ஒத்துப் போகவில்லை.<br /><br />ஏதோ ஒரு ம்உடிவுக்கு வந்தவனாய் தன் செல்பேசியை எடுத்தான்.<br /><br />"ஹெல்லோ டாக்டர் தேவேந்திரன்"<br /><br />"யெஸ் ஸ்பீக்கிங்க்"<br /><br />"நாந்தான் சக்தி பேசுகிறேன், சிவாவுடைய நண்பன்"<br /><br />"சொல்லுங்க மிஸ்டர் சக்தி, நானே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு இருந்தேன், நீங்களே கால் பண்ணிட்டீங்க"<br /><br />"நானும் உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன் டாக்டர், இன்னிக்கு ஈவ்னிங்க் ஒரு 4 மணிக்கு முடியுமா முடியுமா டாக்டர்?"<br /><br />"4 மணியா... ஓ.கே. நீங்க கிளினிக்குக்கு வரவேண்டாம், நேரே நான் தங்கி இருக்கற கெஸ்ட் ஹவுஸ் அடடயாறுல இருக்கு, அங்க வந்துருங்க மிஸ்டர் சக்தி"<br /><br />"ஓ கே டாக்டர், ரொம்ப தேங்க்ஸ் நான் ஷார்ப்பா 4 மணிக்கு அங்க இருப்பேன்"<br /><br /><br />மாலை 4 மணிக்கு முன்னதாகவே சக்தி அவரின் இருப்பிடத்தை அடைந்தான்.<br /><br />"காஃபியை எடுத்துக்குங்க சக்தி, இப்போ நான் சொல்லப் போர விஷயம் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கலாம், அல்லது அதிர்ச்சியாகவும் இருக்கலாம், நான் சொல்றதை பொறுமையா கேளுங்க, ஏதாவது சந்தேகம்னா கடைசியா நீங்க கேட்கலாம்"<br /><br />"சொல்லுங்க டாக்டர்.."<br /><br />"உங்க ஃபிரண்ட் சிவா, அதான் எழுத்தாளர் சிவப்பிரகாஷ் கடந்த சில நாட்களா, சில நேரங்களில் அவருடைய கட்டுப் பாட்டில் இருப்பதில்லை."<br /><br />"டாக்டர் யூ மீன்..?"<br /><br />"முழுசாக் கேளுங்க மிஸ்டர் சக்தி! அந்த சில நேரங்களில் அவருடைய நடவடிக்கைகள்தான் அவருக்கு சுத்தமா நினைவில் இருப்பதில்லை. அந்த நேரங்களில் அவருடைய மனசு அல்லது உள்மனசு அல்லாத ஏதோ ஒண்ணு அவரை இயக்குது"<br /><br />"டாக்டர்.. தட் மீன்ஸ்..சிவாவுக்கு.....!?"<br /><br />"யெஸ் யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் சக்தி...."<br /><br /><a href="http://pithatralgal.blogspot.com/2006/03/71-12.html">இதற்குப் பின்</a>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0