Sunday, July 22, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 2

பகுதி 1

உள்ளங்கையில் துளசியை ஏந்தியவாறே வலம் வந்தோம்.

"ம்க்கும்" தொண்டையைக் கணைத்து என் இருப்பை நினைவூட்டினேன்.

"..."
என்ன என்று கேட்பது போல் தலை திருப்பினாள்.

"எதுனா பேசுறது! ஒண்ணுமே பேசாம போனா எப்படி?"

"கோயில் வந்தது சாமி கும்பிட, உன் கூட பேச இல்லை"

"அது சரி. அப்போ நான் வராம இருந்தா மேடம் ஏன் கோவிச்சிக்கணும்?"

"நீங்களும் கோயிலுக்கு வரணும். ஆனா பேசணும்னு அவசியம் இல்லை, அதான்!"

"அட!"

"சரி சரி! எல்லாரும் பார்க்குறாங்க! பிரசாதம் வாங்க வரிசைல நில்லு"

ஆளுக்கொரு புளியோதரை நிறைந்த தொண்ணையுடன் படிக்கட்டில் இறங்கினோம். ஏறத்தாழ அனைவரும் சென்றுவிட்டிருந்தனர் ஓரிருவரைத் தவிர.

"முண்டம், ஏண்டா லேட்டு?"

"என்னது முண்டமா?"

களுக்கென்னு சிரித்தாள்.

"பின்னே லேட்டா வந்தா ஏங்க மிஸ்டர் லேட்னு கேக்கணுமா?"

"அதுக்காக முண்டம்னு சொல்றதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்"

"இதுக்கே இப்படின்னா...!"

"என்ன இதுக்கே இப்படியா? அப்போ இன்னும் என்னவெல்லாம்டி சொல்லுவே?"

"தோ பாரு! இந்த டீ போடுற வேலையேல்லாம் வேண்டாம்"

"பின்னே நீ மட்டும் முண்டம்னு சொல்லுவியா?"

"சரி! விடு! நீ பாட்டுக்கு உன் லேட்டா வந்தா என்ன அர்த்தம், நான் தேடிகிட்டே இருந்தேன் தெரியுமா?"

"ஓ! சாரிப்பா! அதான் வந்துட்டேன்ல! நேத்து கொஞ்சம் அசைன்மெண்ட்ஸ் அதிகம் குடுத்துட்டாங்க! ஃபைனல் இயர் வேற! அதான் எழுதி முடிக்கும்போது மணி 12.30 ஆயிடுச்சு! நல்லாத் தூங்கிட்டேன்"

"அப்போ நல்லாத் தூங்கலையா என் செல்லம்"

"இல்லை! ரேடியோல பாட்டைக் கேட்டவுடன் விழுந்தடிச்சிட்டு எழுந்து குளிச்சிட்டு ஓடியாந்தேன்"

"ம்ம், இப்போ கடைசி வருசம், முடிச்சதும் ஐயாவுக்கு என்ன திட்டமோ? வேலை தேடுறதுதான?"

"என்னது வேலையா" வெறும் டிப்ளமோ முடிச்சிட்டு வேலைக்குப் போனா, உன்னை வெச்சி குடும்பம் நடத்துற அளவுக்கெல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா! அடுத்து ஐயா எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேரப் போறேனாக்கும்"

"ஓ! இஞ்சினியரிங்க் காலேஜ் நம்ம ஊர்லே கிடையாதே! வேற ஊருக்குப் போயிடுவியா?"

"ஆமா! ஆனா மூணே மூணு வருஷம்தான்"

"மூணு வருஷமா? ஐய்யோ! எப்படிடா என்னை விட்டுட்டு இருக்கப் போறேன்னு இவ்ளோ கூலா சொல்லுறே? எனக்கு கேட்டவுடனே திக்குங்குது"

"வேற என்ன பண்ணுறது? நான் தூரமா போனாலும் என் மனசுக்குள்ளே நீ இருந்துகிட்டே இருப்பியாம். நான் உன் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருப்பனாம், மூணு வருஷம் மூணே நிமிஷமா ஓடிடுமாம், இஞ்சினியரிங் முடிச்சதும் நல்ல வேலைல உக்காரணும். நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும், நான் உன்னை மகாராணி மாதிரி வெச்சி காப்பாத்துவேனாம்"

"நிஜமாவா! வேற ஊருக்குப் போனதும் என்னை மறந்துட மாடியே"?

"சத்தியமா என் செல்லம்! என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல, நீ வேணா பாரேன் இந்த அரங்க நாதர் கோயில்ல வெச்சி சொல்லுறேன், நமக்கு இதே கோயில்ல வெச்சித்தான் கல்யாணம் தடபுடலா நடக்கும் பாரேன்"

அதே நேரம் கோவில் ஒலிபெருக்கியில்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்விதிருக் காப்பு."

என்று பாசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

"பார்த்தியா! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று பெரியாழ்வாரே நம்மை ஆசீர்வதிக்குறா மாதிரி இருக்குதுல்ல" என்றேன்.

சாந்தமான புன்னகையுடன் ஆமோதித்தாள்.

ஆயினும் அவள் கண்களில் கொஞ்சம் கவலை குடி கொண்டிருந்ததை கவனிக்கத் தவறவில்லை நான்.

தொடரும்......................................!

பகுதி - 3

No comments:

Post a Comment