Monday, October 22, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 9

பகுதி 8

"டேய் அங்க பாருங்கடா! பூவும் புயலும் ஒண்ணா வருது!" என்ற சக கல்லூரி மாணவர்களின் அங்கலாய்ப்பைப் பொருட்படுத்தாது வண்டியை கல்லூரிக்குள் ஓட்டிச் சென்றான் சக்தி!

"ரொம்ப தாங்க்ஸ் சக்தி" என்றாள் புன்னகையுடன்.

"தாங்க்ஸை ஒரு காஃபி சாப்பிடுகிட்டே சொல்லலாமே" என்று காண்டீனிற்கு அழைத்துச் சென்றான்.

புரொபெசர் சாம் உள்ளே நுழையவும் சலசலப்புகள் குறைந்து வகுப்பு அமைதியானது.

"டியர் ஸ்டூடண்ட்ஸ் போன செமஸ்டருக்கான எக்ஸாம் ரிசல்ட் வந்தாச்சு!
வழக்கம்போல யுனிவர்சிட்டி ரேங்கிங் நமக்குத்தான் கிடைச்சிருக்கு. அது யாருன்னு உங்களுக்கே தெரியும்"

மணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பிறகு அவரையே ஆர்வமுடன் பார்த்தனர்.

"யெஸ்! நீங்க எல்லாரும் நினைச்சது சரிதான். மிஸ்டர் சக்தி! ப்ளீஸ் கெட் அப்! அண்ட் கம் ஹியர்" என்று அவர் உற்சாகமாகக் குற கரவோலியில் வகுப்பு அதிர்ந்தது.

சக மாணவர்களோ "சக்தி சக்தி.." என்று உற்சாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களே சக்தியை எழுப்பி வகுப்பின் முன்புறமாகத் தள்ளிச் சென்ற்னர்.

சக்திக்கு ஒரு புறம் உற்சாகமும், மகிழ்ச்சியும் பெருகி வந்தாலும் ஒரு புறம் கூச்சமாக இருந்தது.
"என்னடா இது, அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமாக இருக்கிறதே" என்று நினைத்தவன் "பின்னே சும்மாவா கோல்டு மெடல் அல்லவா, யுனிவர்சிட்டி ரேங்கிங்" என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

நந்தினிக்கு இதயத் துடிப்பு அதிகமானது. அவளது உதடுகள் தன்னிச்சையாய் நகம் கடிக்கத் தொடங்கியிருந்தன.

மதிய உணவு இடைவேளை. தனது இருக்கையிலிருந்து சக்தி எழும் முன்னர் நந்தினி அவனை அணுகினாள்.

"கங்கிராட்ஸ் சக்தி! நான் எதிர்பார்க்கவே இல்லை! ஆனா சாதிச்சிட்டீங்க"

புன்னகையுடன் கை குலுக்கினாள்.

"தாங்க்ஸ் நந்தினி. நானும்தான் எதிர்பார்க்கலை. அன்னிக்கு பின்னாடி இருந்து பசங்க பண்ணின சேட்டைல கை தூக்கினேன். சார் பாட்டுக்கு அவரா முடிவு பண்ணிடார். அதுக்கப்புறம் தினமும் எனக்கு தனியா டியூஷன் எல்லாம் எடுத்து...., நான் பட்ட கஷ்டங்களை விடவும், அவரோட உழைப்பையும் மறக்க முடியாது. ஹீ ஈஸ் எ கிரேட் மேன், ரொம்பவே கேர் எடுத்துகிட்டாரு"

கல்லூரி காம்பவுண்ட் வாசலில் ஒரு ஜீப் மற்றும் இரண்டு மூன்று பைக்குகளில் சிலர் வந்து இறங்கி இருந்தனர்.

கண்ணில் படும் ஒவ்வொருவராக அழைத்து "இங்க யாருடா சக்தி, அவன் கிளாஸ் எங்கடா?" என்றவாறு அராஜமாக அலைந்து கொண்டிருந்தனர்.

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு விறுவிறு வென்று கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்தனர். சக்தியின் வகுப்பறையைக் கண்டுபிடித்து அங்கே செல்ல அங்கே வகுப்பு காலியாக இருந்தது.

"டேய் காண்டீன் போயிருப்பான், வாங்கடா போலாம்" என்று காண்டீனைத் தேடிப் புறப்படனர்.

சாப்பாட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு பிசைந்து கொண்டே இருந்தாள் சுகந்தி. அவளது கவனம் சாப்பாட்டின் இல்லை என்பது நன்கு தெரிந்தது.

காலையில் எழுந்ததில் இருந்தே மனம் ஏதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தது. ஒரு வாய் சாப்பிட்டதும் அவளுக்குப் புரையேறியது.

மூக்கின் வழியாக சோற்றுப் பருக்கைகள் வெளியே வந்து விழுந்தன. கண்ணில் நீர் வழிந்தது.

"ஏண்டீ! பக்கத்துலதான தண்ணி இருக்கு! எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே"
சமையற்கட்டிலிருந்து அம்மாவின் குரல் கேட்டதும் கிளாஸை எடுத்து மடக் மடக் என்று தண்ணீரைப் பருகினாள்.

"சக்தி! உனக்கு ஏதோ ஆபத்துடா! கடவுளே! சக்திக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாது"

மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் சுகந்தி!

தொடரும்.....................!

No comments:

Post a Comment