Tuesday, January 24, 2006

அமானுஷ்ய வாசகி #2

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/1.html

நாக்கு உலர்ந்து போய் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள நெற்றியில் ஆறாய் ஓடும் வியிர்வையினூடே நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தேன். என் மனைவி என்னவோ, ஏதோ என்று பயந்து விட்டாள். உடனடியாக ஓடிச்சென்று சாமி படத்திற்கருகிலிருந்த விபூதியைக் கொஞ்சம் எடுத்து வந்து என் நெற்றியில் பூசி விட்டாள். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு சுய உணர்வே திரும்பியது.
உடனே என் நண்பனை செல்பேசியில் அழைத்தேன்.

"டேய், கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?, முக்கியமான விஷயம்"
"இந்நேரத்திலா, மணி இப்போ நைட் 10.30 ஆகுது, என்ன விஷயம் சொல்லு, ஏதாவது பிரச்னையா?"
"உடனே கிளம்பி வாயேன், நேர்லயே சொல்றேன்"
"சரி இன்னும் அரை மணியில அங்க இருப்பேன்"
தொடர்பை துண்டித்தான்.

காலி தேனீர் கோப்பையை டீபாயின் மீது வைத்தவாறே என்னை ஏறிட்டான்.
"அந்த கடைசியா வந்த கடிதங்கள் அந்த பெண்தான் எழுதியிருக்க வேண்டுமா என்ன? வேறு யாராவதோ கூட எழுதியிருக்கலாம் அல்லவா?"

"அப்படியே பார்த்தாலும் கூட இன்னிக்கு வந்த கடிதத்தை வேறு யாரும் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை, ஏன்னா இன்னும் அந்த நாவலை பிரசுரத்துக்கே நான் இன்னும் கொடுக்கலை"

"நீ இபோ எழுதிகிட்டிருந்த இந்த நாவலை பத்தி யார்கிட்டயாவது பேசியிருக்கியா? வெறும் தலைப்பே மட்டுமே வெச்சி விளையாட்டுக்காக இப்படி பண்ணலாமே?"

"இல்லியே, அந்த நாவலில் வற்ற கேரக்டர்களை பத்தி கூட தெளிவா விமர்சனம் பண்ணப்பட்டிருக்கு அந்த கடிததுல"

"அப்படியா....." என்றவாறே அழ்ந்த யோசனியில் இறங்கினான் என் நண்பன்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/01/3.html

No comments:

Post a Comment