Wednesday, January 25, 2006

அமானுஷ்ய வாசகி #4

இதற்கு முன்: http://pithatralgal.blogspot.com/2006/01/3.html

"சரி நீ போய் சீட்ல உக்காரு. நான் வாட்டர் பாட்டில் வாங்கி வர்றேன் " என்ற என் நண்பனிடம்
"சீக்கிரம் வந்துடு.." என்று கூறி அனுப்பி விட்டு என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.

இனி கதையை என் நண்பன் தொடர்கிறான்....
"என்ன இது, இவனே ரிசர்வ் பண்ணிட்டு விளையாடுறானா? என்று சிந்தித்தவாறே நடத்துனரை நைசாக ஒரம் கட்டினேன்.
"சார், இவர்தான் அன்னிக்கி ரிசர்வ் பண்ண வந்தாருன்னு எப்படி இவ்வளவு க்ரெக்டா சொல்றீங்க?"
"இன்னும் உங்க குழப்பம் தீரலியா?.. அன்னிக்கு புக்கிங் கவுண்டர் பக்கத்துலதான் நானும் இருந்தேன்.
இவரு முதல்ல ஒரு டிக்கெட்தான் புக் பண்ணினாரு, அப்பக் க்ஊட அவர் முகத்தை சரியா பார்க்கலை நான்..போயிட்டு கொஞ்ச நேரத்துலயே வேக வேகமா திரும்பி வந்த அவர் என் மேலதான் இடிச்சிகிட்டார். அவர்ஹ் திரும்பி போகும்போது பின்னாடி நின்னிருந்த ரெண்டு பேரு அவரு ஏதோ ஒரு எழுத்தாளர் மாதிரி இருக்கறதா பெசிக்கிட்டாங்களே..'
"சரி, அந்த ரிசர்வேஷன் ஸ்லிப்புல எழுதியிருப்பாரில்லையா, அது எனக்கு கிடைக்குமா..?"
"என்னா சார், பஸ் கிளம்பற நேரத்துல இதெல்லாம் முடியுங்களா?"
"சரி இப்ப வேண்டாம். 2 நாள் கழிச்சி வர்றேன். அப்ப கிடைக்குமா?"
"நீங்க வேற, பழைய குப்பையெல்லாம் தேடனுமே..கிளார்க் சத்தம் போடுவார் சார்.."
"அவ்வளவுதானே.. அவரை நான் கவனிச்சிக்கறேன்..இப்ப இதை வச்சிக்கங்க..அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்து வைங்க.. நான் வந்து வாங்கிக்கறேன்"
ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அவர் கையில் தினித்தேன்.
"என்ன சார், ஏதாவது பிரச்னையா..? "என்று கேட்டவாறே வாங்கி தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.
"சரி சரி.. டைம் ஆச்சு..சீட்டுக்குப் போங்க.."
பஸ் புறப்பட்டது.
இதற்குப் பின்: http://pithatralgal.blogspot.com/2006/01/5.html

No comments:

Post a Comment