Wednesday, February 8, 2006

அமானுஷ்ய வாசகி #8

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களைச் சுமந்தவாறு அறைக்குத் திரும்பினேன்.
"என்ன? நல்லா காத்து வாங்கி வந்தியா, சரி எனக்கு என்ன வாங்கி வந்தே.?" என்றான் என் நண்பன்.

"போகும்போது ஒண்ணுமே சொல்லியனுப்பாம என்ன வாங்கி வருவாங்கா உனக்கு?" என்றேன்.

சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. நானே ஆரம்பித்தேன்.

"அப்போ இந்த ஊருக்கு வந்து ஒரு பிரயோஜனமான விஷயமும் கிடைக்கலை. ஊருக்குப் புறப்பட வேண்டியதுதானே.."

"நான்தான் சொன்னேனே, அவசியாமா வந்துதான் ஆகனுமான்னு, சரி இன்னிக்கே டிக்கெட் கிடைக்குதான்னு பார்ப்போம்.."

"ஆமா அந்த பொண்ணு எப்படி இறந்துதாம்?" மெதுவாய் இவனிடம் கேட்டேன்.

"அதான் அவளோட புருஷன் சொன்னாரே, பிரசவம் சிக்கலாய்டுச்சின்னு...."

"இதை இப்போதான் நீ தெரிஞ்சிகிட்டயா.? இதுக்கு முன்னாடியே தெரியுமா?"

"என்ன உளற்ரே நீ? அந்த பொண்ணு செத்ததே இதுக்கு முன்னாடி வந்தப்போதான் தெரியும்"

எனக்கு ஏதோ ஒன்று கொஞ்சமாய் புரிவது போலிருந்தது.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/9.html

No comments:

Post a Comment