Wednesday, August 8, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 5

பகுதி 4

அடுத்து வந்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை. பிரிய இருக்கிறோம் என்று கவலையுற்றே பிரியாமலே இருந்தோம். கவலைப் பட்டுக் கொள்வதற்கே சந்தித்தோம். மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரிந்தோம் அன்றைய பொழுது சாய்ந்ததும்.

தினந்தோறும் நேசத்தின் மழையின் நனைந்தேன். அவ்வப்பொழுது அவளின் கண்ணீர் மழையினிலும்!
ரிசல்சட் வந்த அன்று 97% மதிப்பெண் பெற்றதத அறிந்து என்னை விடவும் அதிகம் மகிழ்ந்தவளும் அவள்தான்! அதை விட அதிகமாய் அழுதவளும் அவள்தான்! அதிகப் படியான மதிப்பெண்கள் எங்களுக்கிடையில் தொலைவை அதிகமாக்கும் என எண்ணியிருந்தாள் போலும்.

"மண்டு! எவ்வளவு தொலைவு போனாலும் நான் உன்னோடதானடி இருப்பேன்?"

"எப்படி?" என்றாள் கண்களை அகல விரித்தபடி. ஒன்றும் தெரியாதவள் போல் நடிப்பதில் கில்லாடி.

"இப்படி" என்றேன்.சட்டென அவள் கை விரல்கள் பற்றி என் இதழோடு சேர்த்து ஒரு முத்தமிட்டேன்.

"ச்சீ! போடா! ஏன் இப்படி என் உசிரை வாங்குறே?" என்றாள்.

"அட! என் உசிரைத்தானடி நான் வா ங்குறேன்" என்றேன்.

"உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" என்றாள்.

"ஆமாம்! என்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" கண்சிமிட்டினேன்.

"போடா பொறுக்கி!" பொய்க்கோபம் காட்டினாள்.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு விதமாய்.

சீண்டிப் பார்த்து சிதறிப் போனோம் . தீண்டிப் பார்த்து திக்குமுக்காடினோம்.

பரிகசித்துக் கொண்டோம். பரிதவித்துக் கொண்டோம்!

பங்குனித் தேர்த்திருவிழாக் கடைகளில் இன்னும் கூட்டம் இருந்தது.
மலைக் கோட்டைக் குளக்கரையில் வண்ண வண்ண பொம்மைகள், வளையல்கள், வீட்டு உபயோகச் சாமான்கள், அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள்.. திருவிழா முடிந்த ஒரு மாதம் இன்னும் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தன.

அவளை கடைக்கு அழைத்து வந்தேன்.

"வேணுங்கறதெல்லாம் வாங்கிக்க!"

"ஒண்ணும் வேணாம்டா எனக்கு"

எனக்குப் புரிந்தது.

நானே எனக்குப் பிடித்த வளையல்களை வாங்கி அவள் கைகளில் மாட்டினேன். அவள் மனசு நெகிழ்ந்தது. வளையல் சுலபமாய் நுழைந்தது!


எதிர்பார்த்திருந்த நாள் வந்தே விட்டது. எதிர்பாராதிருந்த நாளும் அதுதான் என அவள் சொல்லிக் கொண்டாள்.

ஆம்! கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடுதாசியில் வந்திருந்தது.

அன்றுதான் அவள் முகம் தொட்டுக் கண்ணீர் துடைத்தேன்!

என் விரல் பற்றி முத்தமிட்டாள்.

அன்றுதான் முதல் முறையாக பிரிவு பற்றி எனக்குள்ளும் கலக்கம் ஏற்பட்டது.

தைரியம் சொல்லிக் கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தேன்.

"என்னை விட்டுப் போயிடாதடா?" கண்ணீருடன் அன்றைய சந்திப்பை முடித்து வைத்தாள்.



தொடரும்...................!

பகுதி - 6

No comments:

Post a Comment