Tuesday, March 11, 2008

மாதங்களில் அவள் மார்கழி! - 14

பகுதி 13

தனது செல்ஃபோன் ஒலிக்க படுக்கையிலிருந்து எழுந்து தனது செல்போனை எடுத்தான் சக்தி! நந்தினியின் எண்ணிலிருந்து அழைப்பு!

"சக்தி! நான் நந்தினி பேசுறேன்! எப்படி இருக்கீங்க?"

"ஹாய் நந்தினி! இப்ப பரவாயில்லை! ஆல் ரைட் நவ்! ஆனா வீட்டுல அம்மா அப்பால்லாம் பண்ணுற ஆர்ப்பாட்டத்துல டோட்டலா பெட் ரெஸ்ட்தான்! ரொம்ப போர் நந்தினி"

"அட! எதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க சக்தி! நல்லா ரெஸ்ட் எடுங்க! இன்னொரு விஷயம் சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சது யாருன்னு தெரிஞ்சி போச்சு!"

"அப்படியா! ஒரு நிமிஷம் நந்தினி! நான் மொட்டி மாடிக்கு வந்துடறேன்! இங்கே அம்மா காதுல விழுந்தா பிரச்சினை ஆயிடும்! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னு திரும்பவும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க!"

"ஓகே சக்தி!"

"ம் இப்ப சொல்லு நந்தினி! எதுக்காக அடிச்சாங்கன்னு எதாச்சும் தெரிஞ்சிதா? போலீஸ்ல பிடிச்சிட்டாங்களா! உங்க அண்ணன்தான் ஆர்வமா அவனுங்களை தேடிகிட்டிருந்தார் கைல சிக்கினாங்கன்னா உன் அண்ணனே பின்னிடுவார் போல"

"சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சதே அவர்தான்! அடிச்சவங்களைக் கண்டு பிடிக்கிறேன்னு உங்ககிட்டே பாவனை வேற!"

"நந்தினி என்ன சொல்றே நீ? உங்க அண்ணனா?"

"ஆமா சக்தி! அட்ச்சிட்டு அவங்களாவே போலீஸ்ல போயி சரண்டர் ஆயிட்டாங்க! என் அண்ணன் போயி அவங்களை ஜாமீன்ல எடுத்ததை நானே என் கண்ணால பார்த்தேன்! பிறகு ரொம்ப கோபமா சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டே வந்துட்டேன்! என்னமா நடிக்குறாரு தெரியுமா? அன்னிக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவராலே பதிலே சொல்ல முடியலை"

"கொஞ்சம் அவசரப் பட்டுட்டியே நந்தினி! எனக்கென்னவோ அவரா இருக்காதுன்னுதான் தோணுது! உன் அண்ணன் ஜாமீன்ல எடுக்குறதைப் பார்த்தா சொன்னியே! நீயே போய் பார்த்தியா? இல்லை வேற யாராச்சும் சொல்லி போயி பார்த்தியா?"

"என்ன சொல்றீங்க சக்தி! எனக்கு குழப்பமா இருக்கே! அன்னிக்கு வந்த அனானிமஸ் காலை வெச்சித்தான் நான் அன்னிக்கு எலிஃபெண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன் போயி பார்த்தேன்! ஆனா அவரேதான் ஜாமீன்ல எடுத்திருக்கார், அவங்களுக்கும் அண்ணன் அனுப்பினத்தான் ஸ்டேஷன்லே சொல்லி இருக்காங்க!"

"அங்கதான் நந்தினி ஏதோ ஒரு மர்மம் இருக்கு! அவரே ஆட்களை அனுப்பியிருந்தா அவரே போயி ஜாமீன்ல எடுத்திருக்க மாட்டார். அதுக்கு அவசியமும் இல்லை! ஜாமீன்ல எடுக்க அவர் நேர்ல போயித்தான் ஆகணுமா என்ன? அப்புறம் இன்னொரு விஷயம் நந்தினி அதன்பிறகு அந்த ஸ்டேஷன்லே போயி விசாரிச்சி பார்த்தியா அவங்க மேல எஃப்.ஐ.ஆர் என்னன்னு போட்டிருக்காங்கன்னு ஏதாச்சும் தெரியுமா?"

"இல்லை சக்தி! அவர் ஸ்டேஷன்லேர்ந்து கெளம்பின பிறகு நான் திரும்ப ஹாஸ்பிடல் வந்துட்டேன்! அன்னிக்கும் அடுத்த நாளும் அங்கயே இருந்து நீங்க டிஸ்சார்ஜ் ஆகி ஊருக்குக் கிளம்பினதும்தான் வீட்டுக்குப் போயி துவம்சம் பண்ணிட்டேன்"

"தப்பு பண்ணிட்டே நந்தினி! இன்னும் கொஞ்சம் நிதானமா விசாரிச்சிப் பார்த்திருக்கணும்! உன் அண்ணன் என்னை அடிக்கனும்ங்குறதுக்கு காரணமே கிடையாது! மேலும் உன் அண்ணனைப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும்! காலேஜ்ல பசங்க சொல்லி கேட்டிருக்கேன் கொஞ்சம் அடாவடி அரசியல் பண்ணுறவர்தான்! ஆனா காரணம் இல்லாமே யார் மேலயும் கை வைக்க மாட்டார்"

"...."

"அப்படிப்பட்டவர்கிட்டே நீ ஏன் சண்டை போட்டே நந்தினி? பாவம் நீ கோவிச்சிகிட்டேன்னு துடிச்சி போயிருப்பார், முதல்ல வீட்டுக்குப் போயி உன் அண்ணன்கிட்டே மன்னிப்பு கேளு நந்தினி!"

"சக்தி! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு! எதுக்கும் ஸ்டேஷனுக்கு போயி முதல்ல விசாரிச்சிப் பார்த்துடறேன்!" என் கோபம் உங்களுக்கு இப்ப புரியாது சக்தி"

"அண்ணன் மேல தங்கைக்கு கோபம் எல்லாம் வரக் கூடாது சக்தி! அவர் உன் மேல எவ்வளவு பாசமா இருக்கார்!"

"ஐயோ! விடுங்க சக்தி! என்னை மேலும் மேலும் குழப்பாதீங்க! சரி நான் அப்புறமா பேசுறேன் சக்தி" என்று தனது செல்போனை அணைத்துவிட்டு
குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்!

"ஒரு வேளை சக்தி சொல்றது சரியா இருக்குமோ............?"

பகுதி 15

No comments:

Post a Comment