Thursday, February 12, 2009

மாதங்களில் அவள் மார்கழி - 16



"என்னடா சொல்றே! நீ சொல்றது நிஜமா? அப்போ அந்த பொறம்போக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?"


"ஆமாங்க தலைவரே! அந்தப் பையன் அவங்க ஊர்லயே ஒரு பொண்ணை விரும்பிகிட்டிருக்கான்! அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்! இப்போ அவங்க வீட்டிலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க!"


"ம்! என் தங்கச்சி விரும்பிட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான் அவன் மேல கை வெக்காம விட்டிருந்தேன்! எப்போ அவன் என் தங்கச்சியை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிதோ, அவனை உயிரோட விட்டு வெக்க என் மனசு இடம் கொடுக்கலை! நம்ம முரளியை வந்து என்னை பார்க்கச் சொல்லு! அப்படியே அந்தப் பையனோட ஃபோட்டோ ஒண்ணு எனக்கு வேணும்!

.....................................................................................................................................................................

"அண்ணே! நான் காலேஜுக்கு கிளம்புறேன்"
அவசர அவசரமாக நந்தினி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்!

"அட! என்னம்மா இது! டிஃபன் கூட பண்ணாம! சாப்பிட்டுட்டுப் போம்மா! மஞ்சுளா நந்தினிக்கு டிஃபன் கூட எடுத்து வைக்காம என்ன பண்ணிகிட்டிருக்கே அங்கே?"

சமையலைறை நோக்கிக் குரல் கொடுத்தான் தென்னரசு!

"அண்ணே! ப்ளீஸ் காலேஜ் கேண்டீன்ல போயி பார்த்துக்கிறேன்! அண்ணி நிதானமா சமைச்சி உங்களுக்கு கொடுப்பாங்களாம்! நீங்க சமர்த்தா சாப்பிடுவீங்களாம்! நான் இப்போ காலேஜ்க்கு கெளம்புவேணாம், சரியா"

கொஞ்சலாகக் கேட்டாள்.

"சரி! பார்த்துப் போம்மா! நல்ல பொண்ணுடா!" தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டே வழியணுப்பி வைத்தான்.


சரியாக இரண்டு வருடங்கள் கழித்து..........................................................

தனது செல்ஃபோன் ஒலிக்க காதருகே கொண்டு சென்றான் சக்தி!

"என்ன! இப்பவா! ஹாஸ்பிடல் கொண்டு போயாச்சா! இதோ இப்பவே கிளம்பி வரேன்"..

திடுமென டென்ஷன் கூடிப்போனது! அவசர அவசரமாக தனது மேலாளரிடம் கூறி விட்டு அலுவலக வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தான்!

மருத்துவமனை ரிஷப்ஷனில் அறை எதுவென விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றான் சக்தி!

அவனது பெற்றோர்கள் மற்றும் சுகந்தியின் பெற்றோர்களும் சிறிதளவு பதட்டம் குறைந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்! சக்தி உள்ளே வந்ததும் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.

"என்னடா! ரொம்ப வலி எடுத்துடுச்சா!"
"ம். எங்க நீங்க வராம ஆஃபீஸ்லயே இருந்துடுவீங்களோன்னு கவலையாயிடுச்சு தெரியுமா! "

தலையைத் தடவி விட்டான்!

"நான் வராம இருப்பனா சுகந்தி! நீ என் உசிராச்சே! இப்போ என் இன்னொரு உயிரையும் சுமக்குறே! இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த உயிரையும் கைல கொடுக்கப் போறே! இந்த நேரத்துல கண்டிப்பா நான் உன் கூட இல்லாம எங்கடா போயிடுவேன்"

"என்னங்க! நமக்குப் பிறக்கப் போறது ஆணா பெண்ணா?"

"எதுவா இருந்தாலும் நமக்கு ஓகே சுகந்தி!"

"எனக்குப் பொண்ணுதான் பிறக்கணும்னு ஆசையா இருக்குங்க சக்தி!"

"அப்ப கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்! ஆமா பொண்ணு பிறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிருக்கே!"

"நான் என்ன பேர் வைக்கணும்னு சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு!"

"இப்ப எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியலைடா! நீயே சொல்லிடேன்!"

மெதுவாக சக்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்! அவளது கண்கள் கொஞ்சம்போல கலங்கியது!

"நம்ம பொண்ணுக்கு நந்தினின்னு பேர் வைக்கணுங்க சக்தி!"

"ஹேய்! என்ன இது இப்பப் போயி கண் கலங்குறே!"

மனசுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பாரமானது! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை!

அதற்குள் அந்த அறைக்குள் வந்த நர்ஸ் இருவர் "சார்! நீங்க வெளியே போயி இருங்க! டைம் ஆச்சு! இவங்களை ஆபரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டுப் போகணும்" என்றார்கள்!

பழைய நினைவுகள் சக்தியின் மனதில் நிழலாடத் துவங்கின!

கல்லூரி கேண்டீனில்
"சக்தி! எப்படியோ உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க போல! கங்க்ராட்ஸ் சக்தி" என்றாள் நந்தினி!

"ஆமா நந்தினி! ஒரு வழியா சுகந்தியை அறிமுகப் படுத்தி வெச்சி பர்மிஷன் வாங்கிட்டேன்! அம்மாவுக்கு சுகந்தியை ரொம்பவே பிடிச்சிப் போச்சு!"

காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறி வகுப்பை நோக்கி நடந்தனர்!

திடீரென யாரோ ஓடி வருவது போலத் தோன்ற சட்டெனத் திரும்பினாள் நந்தினி!

அதற்குள் ஓங்கிய அரிவாள் ஒன்று சக்தியின் பின்புறக் கழுத்தை நோக்கி வெகு வேகமாக நெருங்க.. சட்டென சக்தியின் விலாவைப் பிடித்து நந்தினி தள்ளிவிட்டாள்!

"சக்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ............"

சக்தி சுதாகரித்து திரும்புவதற்கு எடுத்துக் கொண்ட ஒரே விநாடி்ப் பொழுதில் நடந்து முடிந்திருந்தது!

"டேய்!...." ஓடிவருவதற்குள் வேட்டியும் கைலியுமாய் வந்திருந்த கும்பல் ஓரே ஓட்டமாக ஓடி விட்டிருந்தது!

"நந்தினி...நந்தினி...." அலறிக் கொண்டிருந்தான் சக்தி!

கழுத்தில் வெட்டுப் பட்ட நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தாள்!


"குவா...குவா.." என்ற குழந்தையின் அழுகுரல் சக்தியை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது! ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த டாக்டர் சண்முகவடிவு சக்தியை நெருங்கினார்.

"கங்க்ராஜுலேஷன்ஸ் சக்தி! சுகந்தி ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணுதான் பிறந்திருக்கா உங்களுக்கு! இன்னும் அரை அவர்லே சுகந்தி கண்னு முழிச்சிடுவாங்க நீங்க போயி பார்க்கலாம்.."

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த சக்தி, சுகந்தி ஆகியோருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியே இருந்தன!

"சொன்ன மாதிரியே என் மருமவ பொண்ணைப் பெத்துக் குடுத்துட்டா! சக்தி!

என் பேத்திக்கு என்னடா பேரு வைக்கப் போறே!"

"நந்தினி" என்றான் சக்தி!

அருகிலிருந்த பெருமாள் கோவில் ஒலி பெருக்கியிலிருந்து சன்னமாக நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் கேட்டன.

"பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே"


-:முற்றும்:-

அனைத்துப் பகுதிகளின் தொகுப்பு

5 comments:

  1. ஹைய்யா.. மீ த ஃபர்ஸ்ட்டு... ;) நடுவில நிறைய பார்ட்டு மிஸ் பண்ணிட்டேன்... எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடி கருத்து குத்துக்கு வரேன் ;)

    ReplyDelete
  2. இதுவும் எதிர்பார்த்ததுதான் - நந்தினி என சக்தி-சுகந்தி மகளுக்குப் பெயர் வைப்பார்கள் என்பதும் ......

    மொத்தத்திலே நல்லாருக்கு கத

    ReplyDelete
  3. \\"நந்தினி" என்றான் சக்தி!\\

    இதுக்கு பின்னாடி ...

    ReplyDelete